தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேங்காய் எண்ணெயும் அதன் நன்மைகளும்!

நன்றி குங்குமம் தோழி

* இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதிலிருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்தக்குழாய்கள் மற்றும் எல்.டி.எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.

* தேங்காய் எண்ணெயில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. கோடை காலங்களில் தேங்காய் எண்ணெயை மேல்புற தோலில் பூசிக்கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.

* காயங்கள் ஏற்பட்டு ஆறிக் கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்தக்காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க, அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பதோடு அப்புண்கள் மற்றும் காயங்கள் வேகமாக ஆறவும் உதவுகிறது.

* தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்னைகளை சுலபமாக தீர்க்கிறது.

* தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து, பிறகு அந்த எண்ணெயை துப்பி விட வேண்டும். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுவது, ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும்.

* குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணெயை உடல் மற்றும் தலைக்கு தேய்த்து பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கி கண்களும் குளிர்ச்சி பெறும்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.