தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியும் புராணக் கதையும்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

இந்தக் கதை தீபாவளியை கொண்டாடும் நியதிகளையும் அற்புதமாக விளக்குகிறது. தீர்க்கதமஸ் என்ற முனிவர், தன் வழிபாட்டுக்கு அரக்கர்களாலும், இயற்கைச் சூழலாலும் ஏற்பட்ட பல தடங்கல்கள் குறித்து மிகுந்த கவலை கொண்டார். தவத்தில் சிறந்த சனாதன முனிவரை சந்தித்து தனக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்துக் கூறி அதற்கு பரிகாரம் என்ன என வினவினார். சனாதனர் அவரிடம், ‘‘உமது இன்னல்கள் யாவும் அகன்று நீர் நலம் பெற ஓர் அருமையான விரதம் உண்டு. துலா மாதமாகிய ஜப்பசி மாதம், தேய்பிறை திரியோதசி (தீபாவளிக்கு முதல் நாள்) அன்று மகா பிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்றி மகாதேவனை வழிபட வேண்டும்.

முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த யமதீபம் அருள்பாலிக்கும். மறுநாள் நரக சதுர்த்தி (தீபாவளி) அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராட வேண்டும். இந்தப் புனித நாளில் எண்ணெயில் லட்சுமியும், சிகைக்காய் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமி தேவியும், குங்குமத்தில் கெளரியும், மலர்களில் மோகினியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் அலங்காரப் பிரியனாம் விஷ்ணுவும். பட்சணங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடி, தீபமேற்றி, புத்தாடை அணிந்து இனிப்பும், பட்சணங்கள் படைத்தும் இறை வழிபாடு செய்வதால் நற்கதி அடையலாம் என்று சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு அருள் பெற்றார்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Advertisement

Related News