தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முடி உதிர்வை தடுக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்னையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கரிசலாங்கண்ணி எண்ணெய் தேய்த்து குளித்து வர முடி உதிர்வை தடுக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, பொடுகு மற்றும் அரிப்பைப் போக்குகிறது, முடியை கருமையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. மேலும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் நீக்குகிறது.

மேலும், கரிசலாங்கண்ணி எண்ணெய், சருமத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலையும் ஆற்றும் தன்மை கொண்டுள்ளது.

ஆயுர்வேத மூலிகையான கரிசலாங்கண்ணி, தலைமுடி பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடியதாகும். இதனை வடமொழியில் பிருங்காராஜ் என அழைக்கின்றனர். கரிசலாங்கண்ணியை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் எப்படி எண்ணெய் தயாரித்து பயன்படுத்துவது? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கரிசலாங்கண்ணி எண்ணெயின் முக்கிய பயன்கள்

கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும்.

இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளை நீக்கும்.

இதில் உள்ள நிறமிகள், முடியின் நிறத்தை கருமையாக்க உதவும் மற்றும் நரை முடி தோன்றுவதை தாமதப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி எண்ணெய், சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை ஆற்றும்.

பயன்படுத்தும் முறை

*தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

*இரவில் தடவி, மறுநாள் காலை குளிக்கவும் செய்யலாம்.

*வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

கரிசலாங்கண்ணி - 1 கைப்பிடி அளவு

கறிவேப்பிலை - 1 கொத்து

தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்.

செய்முறை

கரிசலாங்கண்ணி இலைகள் மற்றும் பூக்களோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். (பிஞ்சி தண்டாக இருந்தால் அதையும் அரைக்கலாம்)

பின்னர் ஒரு வாணலியை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் ஓரளவிற்கு சூடானதும், அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி விழுதைச் சேர்க்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்)

எண்ணெய் நிறம் மாறியதும், கறிவேப்பிலை இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். எண்ணெயில் நுரைகள் எல்லாம் அடங்கி இலைகள் எல்லாம் நன்கு பொரிந்ததும் அடுப்பை அணைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிடவும். மறுநாள் எடுத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.

தொகுப்பு: தவநிதி

Advertisement