தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிரசம்...அதிரசம்...

Advertisement

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி பட்சணங்களில் மிகவும் முக்கியமான பலகாரம் அதிரசம். இதனை செய்ய பதம் மற்றும் பக்குவம் மிகவும் முக்கியம்.

* அதிரசத்திற்கு பச்சரிசி மாவு ஈரமாக இருப்பது முக்கியம். உலர்ந்த மாவு உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்காது.

* மெஷினில் கொடுத்து அரைப்பதைவிட வீட்டிலேயே இடித்த மாவு மிக நன்றாக இருக்கும்.

* மாவை திரித்த பிறகு சலிப்பது முக்கியம்.

* அடி கனமான வாணலிதான் உபயோகிக்க வேண்டும்.

* பாகு வெல்லம் மட்டும்தான் நல்ல அதிரசத்தை தரும். மற்ற வெல்லத்தில் நிறமும் கிடைக்காது. பாகு சரியாக வருமா எனவும் தெரியாது. பாகு வெல்லம்

அடர்ந்த நிறமாகவும், சிறிதே மெத்தென்றும் இருக்கும்.

* ஒரு கிலோ மாவிற்கு 1¼ கிலோ பாகு வெல்லம் துருவல் தேவை. சிறிது கூடுதலாக வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், குறைக்கக் கூடாது.

* பாகு ‘முத்து பதம்’ வர வேண்டும். சிறிதே முன்னால் எடுத்தால், அதிரசம் பொரிக்கும் போதே அலண்டு விடும். மிகவும் முற்றி விட்டால் அதிரசம் கெட்டியாக வரும்.

* எண்ணெயில் போட்டதும் மேலெழும்பும். உடனே திருப்பி விட வேண்டும். அதிகம் கரகரப்பாக வேகவிடக் கூடாது. மெத்தென்று இருந்தால்தான் நன்றாக வரும்.

* அதிரசம் எப்போதும் அதிக எண்ணெய் குடிக்கும் என்பதால் ஒன்றொன்றாக போட வேண்டும். பொரித்த பிறகு தட்டில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மீது ஒன்றாக வைக்கக் கூடாது. ஒட்டிக் கொள்ளும். சூடு ஆறிய பிறகுதான் டப்பாவில் போட வேண்டும்.

தொகுப்பு: கி.சுமதி, சென்னை.

Advertisement

Related News