ப்ரியங்களுடன்... பாட்டி வைத்தியம்
நன்றி குங்குமம் தோழி
*பித்தத்தை குறைக்க விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம்.
*குப்பைமேனி இலைச்சாறு அரைத்து தேய்த்து குளித்துவர தோல் நோய் குணமாகும்.
*அத்திக் காயை உட்கொண்டால் உதட்டில் வெடிப்பு குணமாகும்.
*ரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க கரும் செம்பை இலைச்சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
*சுறுசுறுப்பாக இருக்க ரோஜா இதழ்களை சாப்பிட வேண்டும்.
*வாதவலி, இடுப்பு வீக்கம் தீர நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
*வசம்பு தூளை காயத்தின் மீது தடவ வெட்டுக்காயம் ஆறும்.
*மூட்டு வலி தீர நொச்சி இலைச்சாறு, மிளகுத் தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம்.
*மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூச பேன் ஒழியும்.
*கண்ணில் சதை வளருவதைத் தடுக்க பிரம்ம தண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.
*சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர சோகை தீரும்.
*சுக்குத் தூள் 5 கிராம், ஆப்ப சோடா 5 கிராம் தண்ணீர் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
*பாகல் இலைச்சாறை தடவ உள்ளங்கால் எரிச்சல் தீரும்.
*கொன்றை வேர்பட்டை கஷாயம் குடித்துவர உடல் பலம் பெறும்.
தொகுப்பு: ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.