தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காலையில் என்ன பருகலாம்?

நன்றி குங்குமம் டாக்டர்

காலையில் நாம் முதன் முதலில் பருகுவது உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொருத்தும்தான் இருக்க வேண்டும்.

*காலை எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

*தண்ணீருக்குப் பதிலாக முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை நீருடன் குடிக்கலாம்.

*அருகம்புல் சாறு அல்சர் நோயாளிக்கு ஏற்ற பானம். அருகம்புல்லை நாமே வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.

*வெள்ளைப்பூசணி சாறு குடித்தால் தொப்பை, ஊளைச் சதை குறையும். சிறிது மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொண்டால் முழுபலன் பெறலாம்.

*இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக் குறையும். நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

*நெல்லிச்சாறு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை அதிகரிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

* இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான அனைத்து மினரல்களும் இதில் உள்ளது.

* பழைய சாதத்தில் சிறிது சீரகத்தை இட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். காலையில் இந்த நீராகாரத்தை அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கின்றன.

- டி.லதா, நீலகிரி.

Related News