தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர்!

நன்றி குங்குமம் தோழி

இளநீரில் வைட்டமின்கள், மினரல்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், நம்முடைய உடலின் எலக்ட்ரோலைட்டுகள் சீராகின்றன. இவை தவிர இளநீர் குடிப்பதால் பலவித நன்மைகள் ஏற்படும்.

*இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது.

*இதில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம் மற்றும் மாங்கனீசு உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

*இளநீர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

*இதில் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கி செரிமான திறனை அதிகரிக்க உதவுகின்றன.

*குறைந்த அளவு கலோரி மற்றும் பயோ ஆக்டிவ் என்சைம்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

*பொட்டாசியத்தின் குறைவால் இதயபிரச்னை, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.

*இளநீர் அருந்துவதால் சிறுநீரகக் கல் பிரச்னை வராமலும் தடுக்கலாம்.

*ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம்.

*இளநீரில் பச்சை இளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி இளநீர், கேனி இளநீர், குண்டற்கச்சி இளநீர், ஆயிரங்கச்சி இளநீர் என பல வகைகள் உள்ளன.

*கோடை காலத்தில் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் இளநீரை தொடர்ந்து பருகி வந்தால் உடல் குளிர்ச்சியான தன்மையை அடையும். இதனால் கண் எரிச்சல் தீரும். வாதம், பித்தம் போன்ற நோய்கள் இருந்தால் குணமாகும்.

*காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் இளநீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் அது பசியை அறவே ஒழித்து விடும்.

*இளநீர் உடலை ஆரோக்கியமாகவும், மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவும்.

*கோடையில் பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படும். அந்த சமயங்களில் இளநீரை அதிகம் உட்கொண்டால் நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு போன்றவை அகலும்.

*மாலையில் இளநீர் குடித்தால் வயிற்றுப் போக்கு வராது. மேலும் வயிற்றில் பூச்சிகள் எதுவும் இருந்தால் நீங்கி விடும்.

*தாகம் தீர வேண்டுமானால் கேனி இளநீரை குடிக்க வேண்டும். இந்த இளநீருக்கு சூட்டை தணித்து மந்த தன்மையை விரட்டும் ஆற்றல் உண்டு.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.