நிலாவாரையின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி
பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த நிலாவாரை அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. சர்வரோக நிவாரணி என கூறப்படும் நிலாவாரையில் மகத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ நூல்களில் குறிப்புகள் உள்ளன.
*வசம்புடன் கூட்டி சாப்பிட வாயு கட்டி நீங்கும்.
*தயிருடன் கலந்து உண்ண உடலில் உள்ள விஷங்கள் மாயும்.
*கிராம்புடன் கூட்டி சாப்பிட வீரியம் கெட்டிப்படும்.
*நொச்சி சாற்றில் கலந்துண்ண வயிற்றுக் கடுப்பு அகலும்.
*பசு வெண்ணெயில் கூட்டி சாப்பிட திக்குவாய் திருந்தும்.
*மாதுளம் பழச்சாற்றில் உண்ண சரீரத்தின் துர்நாற்றம் அகலும்.
*எலுமிச்சம் பழச்சாற்றில் உண்ண வயிற்று வலி நீங்கும்.
*திராட்சையுடன் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.
*நெல்லி இலையுடன் சாப்பிட இருமல், மூச்சுத் திணறல் அகலும்.
*பருத்திக் கொட்டைப்பாலும், சர்க்கரையும் இத்துடன் கலந்து சாப்பிட வாத ரோகங்கள் நீங்கும்.
*சர்க்கரையுடன் சேர்த்து உண்ண பித்தம் அகலும்.
*நிலாவாரை இலைகளை பசும்பாலில் வேகவைத்து, நிழலில் உலர்த்தி, அரைத்து, சலித்து சூரணமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணம் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். செரிமானத்திற்கு நல்லது.
*குடல் புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை நீக்கும்.
*நிலாவாரை இலையுடன், மருதாணி இலைகளை அரைத்து இளநரைக்கு பூசலாம். முடி உதிர்வதும் குறையும்..
தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.