தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சரும தழும்புகளை போக்க சில தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சருமத்தில் சின்ன சிராய்ப்பு முதல் பெரிய காயம், புண், அறுவை சிகிச்சைக்கு பின் தழும்பு ஏற்படுவது வழக்கம். இவற்றில் சில எளிதில் மறைந்துவிடும். வடுவை, தழும்பை ஏற்படுத்திவிடும். இதை எளிதில் வீட்டிலிருந்தே குணமாக்கிக் கொள்ள சில வழிகள் இதோ..

*சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டாலே தழும்புகள் மறையத் தொடங்கும். இளம் வெயில் சருமத்தில் படுமாறு தினம் சிறிது நேரம் நிற்க உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். இது சரும அலர்ஜி, தழும்புகளை போக்கும்.

*வைட்டமின் ஈ தழும்புகளை போக்க வல்லது. வைட்டமின் ஈ கலந்த கிரீம் அல்லது எண்ணெயை எடுத்து மிருதுவாக சருமத்தில் மசாஜ் செய்து தடவி வர தழும்புகள்

மறையும்.

*ரெடினால் அமிலம் என்று கேட்டால் பார்மஸியில் கிடைக்கும். வைட்டமின் ஈ போலவே பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்யும். மருத்துவரின் ஆலோசனையும் இதை உபயோகிக்க பக்க விளைவுகள் ஏற்படாது.

*லாவண்டர், பாதாம் போன்ற எண்ணெய்களை தழும்பு உள்ள இடத்தில் தினசரி தடவி வர சருமத்தின் மென்மை தன்மையை தக்க வைக்க உதவும்.

*தினமும் குளித்தபின் பாடி லோஷனை தழும்புகள், பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர தழும்புகள் மறையும்.

*குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் வந்த பள்ளங்கள், தழும்புகளை போக்கும்.

*தேங்காய் எண்ணெயை தினசரி குளிக்கும் முன் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் குளித்து வர சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள், சுருக்கங்கள் நீங்கும். சரும நிறத்தை மாற்றி பொலிவைத் தரும். தீக்காயங்களால் உண்டான தழும்புகளைக் கூட தேங்காய் எண்ணெய் போக்கும்.

*பாடிலோஷனை தடவி வர தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

*சந்தனம், மஞ்சள் இரண்டையும் கலந்த கலவையை தழும்புகள் மீது போட்டு வர தழும்புகள், வடுக்கள் மறையும்.

*அரோமா ஆயில், எசென்சியல் ஆயில் ஆகியவற்றை தொடர்ந்து உபயோகிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

- மகாலட்சுமி சுப்ரமணியன்

Related News