தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்

நன்றி குங்குமம் தோழி

* பூண்டுச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி நீவிவிட சுளுக்கு சரியாகும்.

* புளியம் இலைகளை விழுதாக அரைத்து வீங்கியிருக்கும் மூட்டுகளில் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

* வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தடவினால் வாயுவால் ஏற்படும் மூட்டுவலி மறையும்.

* ஓமத்தை ஊறவைத்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, இந்த விழுதை வாணலியில் கிளறி பொறுக்கும் சூட்டில் வலியுள்ள இடத்தில் பற்றுப் போட வீக்கம், வலி குறையும்.

* சீரகத்தை பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும்.

* ரோஜா இதழ் சேர்த்த நீரை குடித்துவர உடல் குளிர்ச்சியாகும். உஷ்ணக் கட்டிகள் வராது.

* தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.

* காராமணியை வேகவைத்து அதனுடன் சுக்குத்தூள், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட மூட்டுவலி குணமாகும்.

* பலவகைகளில் காராமணியை உணவில் சாப்பிட, உடல் தசைகள், தோல் நோய்கள் வராது.

* கொய்யா இலை தேநீர், சர்க்கரை அளவை குறைத்து, கட்டுப்படுத்தும்.

* விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி 2 ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.

* உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். ரத்த சோகை குணமாகும்.

* படிகார நீரால் சில நாட்கள் முகத்தைக் கழுவிவர முகப்பருக்களால் தோன்றும் தழும்புகள் மறையும்.

* நாவல் பொடியை மோரில் கலந்து குடிக்க நீரிழிவு மட்டுப்படுவதோடு, குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.