தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பார்வை கோளாறுகளை சீராக்கும் குங்குமப்பூ!

நன்றி குங்குமம் டாக்டர்

குங்குமப்பூவை அறியாதார் யாரும் இருக்கமுடியாது எனினும் அதனுடைய மருத்துவக் குணத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. பொதுவாக கர்ப்பமடைந்த பெண்கள், குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், குங்குமப் பூ கர்ப்பச் சிதைவை தடுக்கும் தன்மை கொண்டது. எனவேதான், நமது முன்னோர்கள் குங்குமப்பூவின் உயர்ந்த மருத்துவக் குணத்தையறிந்தே குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கச் சொல்லி வைத்தார்கள். சிலர் இனிப்பு பண்டங்களில் கலந்து சாப்பிடச் சொன்னார்கள்.

இன்றைய காலகட்டத்திலும் குங்குமப்பூவின் மருத்துவ குணம் குறித்து பல ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் குங்குமப்பூவை ஆய்வு செய்துள்ளனர். அதில் இருநாட்டு ஆய்வும் ஒரே மாதிரியான முடிவையே கொண்டுள்ளது. அவர்களுடைய ஆய்வின் கூற்றுப்படி குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இழந்த பார்வை மீட்டுத் தருகிறது. வயது முதிர்ச்சியினால் ஏற்படும் மங்கலான பார்வையும் குணமாகும். மேலும், க்ளோகோமா எனப்படும் மிகவும் ஆபத்தான கண் நோயைக் குணப்படுத்துகிறது. அதுபோன்று ரெட்டினா என்னும் விழித்திரை பாதிப்பைக் குணப்படுத்துகிறது. குங்குமப்பூ கண்ணிலுள்ள செல்களுக்குப் புத்துயிரூட்டுகிறது. அதனால் பார்வை மீண்டும் கிடைக்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களின் ஆய்வுப்படி, குங்குமப்பூவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

*வயிற்று வலியைப் போக்கும். இருமலைப் போக்கும்.

*தசைப்பிடிப்பைத் தடுக்கக் கூடியது.

*மாதவிடாய் நோயை சீராக்கும். கர்ப்பச் சிதைவை தடுக்கிறது.

*சிறுநீரைப் பெருக்கும்.

*மலமிளக்கியாக செயல்படுகிறது.

*தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

*செரிமான கோளாறுகளை சரி செய்யும்.

*மன அழுத்தத்தை போக்கும்.

*கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைக் குணப்படுத்துகின்றது.

குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்

ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை கலந்து குடித்து வர உடல் பலம் பெறும்.பால் பிடிக்காதவர்கள், குங்குமப்பூவை தண்ணீரில் 2-3 மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரை அருந்தி வரலாம். அதேசமயம், குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அதிக வெப்பம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, குங்குமப்பூவை அளவாக உட்கொள்வதே நல்லது.

தொகுப்பு: ரிஷி

Related News