தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சப்போட்டா!

நன்றி குங்குமம் தோழி

இனிப்பு மற்றும் கேரமல் போன்ற சுவைக்காக அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் சப்போட்டா. இந்தப் பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் உள்ளது. சப்போட்டா பழத்தை அப்படியே கடித்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவோ பருகலாம். வேறு உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம்.

* இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் சப்போட்டா அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஆற்றலுக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகச்சிறந்தது சப்போட்டா பழம்.

* புரோட்டீனும், இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இதில் சுண்ணாம்பு, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற நுண்சத்துக்களும், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, புரதச்சத்தும் பெரிதும் நிரம்பியுள்ளது.

* இதிலிருக்கும் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’ சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

* உடலில் பித்தம் இருந்தால் இப்பழத்தைச் சாப்பிட்டு, பின்பு ஒரு டீஸ்பூன் சீரகத்தை மென்று விழுங்கினால் எந்தவித பித்தமும் தலை தெறிக்க ஓடிவிடும்.

* கொழுப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து. இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்னைகள் நீங்குகிறது.

* பழ விழுதினை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடியோடு நீங்கிவிடும்.

* உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதோடு கண் பார்வையை அதிகரித்து, தோல் பாதிப்படையாமல் பளபளப்பாக்கும்.

* மன அழுத்தம், மன அமைதியின்மை, மூளைச்சோர்வு குறையும். கர்ப்பிணிப் பெண்களும், தாய்ப்பால் கொடுப்போரும் இப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன் நல்ல சக்தியும், நுண்ணூட்டமும் அதிகம் கிடைப்பதோடு, சருமமும், கேசமும் மின்னும்.

* தூக்கத்திற்கு அருமருந்து.

தொகுப்பு: ச.லெட்சுமி, செங்கோட்டை.