தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாசகர் பகுதி - பாட்டி வைத்தியம்

நன்றி குங்குமம் தோழி

*எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து தினமும் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*ஒரு டம்ளர் அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

*மஞ்சள் தூளை தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும்.

*துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்தால் உணவு வாந்தி நிற்கும்.

*நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலை பாரம் குறையும்.

*கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

*கரிசலாங்கண்ணி இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

*ஒரு செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

*சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

*ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

*தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால், ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

*ஒரு கையளவு ஓமத்துடன் மூன்று வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்றுப் பொருமல் குணமாகும்.

*மணத்தக்காளி கீரையை துவரம் பருப்புடன் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் ஆறும்.

*ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தைப் பொரித்து இடித்து மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

தொகுப்பு:  கே.காசி, திருவண்ணாமலை.