தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாதுளையின் மருத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகையை போக்குகிறது.

*கடுமையான சீதபேதியால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு, அதனுடன் மோர் சேர்த்து அருந்த உடனடி குணம் கிடைக்கும்.

*மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறை சம அளவு எடுத்து அதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.

*கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா 1 கப் எடுத்து கலந்து, உருட்டு பதத்தில் பாகு காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, 2 வேளை சாப்பிட்டு வர, படை, தேமல் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

*மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடிக்க சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

*1 தேக்கரண்டி மாதுளை ஜூஸ், அரை தேக்கரண்டி சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவிட முகத்தில் பளபளப்பு கூடும்.

*சிலருக்கு கண் பொங்கி திறக்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படும். இந்நிலையில், இமைகளும் உதிர்ந்துவிடும். இதற்கு மாதுளம்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆறியதும் அந்த தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது நிற்கும்.

*மாதுளம் பொடியுடன் 1 தேக்கரண்டி பயத்தமாவு, அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம்

2 முறை செய்துவர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

*மாதுளம் தோல் பொடியுடன், 1 தேக்கரண்டி வெட்டிவேர் பொடி சேர்த்து விழுதாக்கி இதை முகத்தில் கலந்து பூசி, காய்ந்தபிறகு கழுவ, பருக்கள் வரவே வராது.

*மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் தலா 1 தேக்கரண்டி எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த விழுதைத் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ, தோல் சுருக்கம் நீங்கும்.

- மகாலட்சுமி சுப்பிரமணியன்