தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் பப்பாளி விதை!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

பப்பாளி பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது யாவரும் அறிந்ததே. தற்சமயம் அதிகமாக கிடைப்பதால் மக்கள் வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், அதன் விதைகளை நீக்கிவிட்டுத் தான் சாப்பிடுவர். விதைகள் பப்பாளியை விட நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கல்லீரலுக்கு தேவையான, ஆரோக்கியமான போஷாக்கை தரும் விதைகள். ‘லிவர் சிரோசிஸ்’ போன்ற கல்லீரல் ேநாய்களை குணப்படுத்தும்.

பப்பாளி விதைகள் ‘பெப்பைன்’ என்ற என்சைமைக் கொண்டுள்ளதால் ஜீரண சக்திக்கு உதவுகிறது. கல்லையும் ஜீரணிக்கக்கூடிய ஆற்றல் விதைகளுக்கு உண்டு. வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை பேஸ்ட் போல தயாரித்து எலுமிச்சை சாறில் கலந்து குடிக்கலாம். சிறுநீரக செயல் பாட்டினையும் நன்றாக தூண்டுவதால், உடலில் தீங்கை தரும் நச்சுக்களையும், கழிவுகளையும் எளிதில் வெளியேற்றும். வயிற்று பூச்சிகளை அழிக்க வல்லது.

பப்பாளி விதைகளை தொடர்ந்து சாப்பிடும் போது, உடலில் கொடிய மாற்றங்களை உருவாக்கும் கேன்சர் செல்களை உருவாக்காமல் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டுவலி ஆகியவற்றை உண்டாக்கும். வீக்கத்தை குறைத்து வலியைப் ேபாக்கும்.இவ்வளவு நன்மைகளை தரும் பப்பாளி விதைகளை வாரம் ஒரு முறையாவது உணவுடன் எடுத்துக் கொண்டு நோய்களை விரட்டலாம்.பப்பாளி விதைகளை உணவில் சேர்ப்போம், நோய்களிலிருந்து மீள்வோம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Advertisement

Related News