தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூக்களின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

பவளமல்லி

உடல்வலி, காய்ச்சல், சளி, இருமல் வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும் பூக்களின் இதழ்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் கஷாயம் தயாரிக்கலாம்.

பவளமல்லி இலைகளோடு சிறு துண்டு இஞ்சி எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க விடவும் கொதித்து பாதியானதும் வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால் சிக்கன்குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும். சளி, இருமல் கட்டுக்குள் வரும் ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்கும். வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷகாய்ச்சல் அனைத்தும் தணியும் இடுப்புவலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்கக் கூடியதாக பயன்படுகிறது பூஞ்சைத் தொற்றை குணப்படுத்துகிறது.

இவ்வாறு பலவித நன்மைகள் கொண்ட பவளமல்லியை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். செண்பகப் பூசெண்பகப்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்க நீரிலிட்டு காய்ச்சி பூவை வடிகட்டி அருந்திட நல்ல குணம் கிடைக்கும்.

செண்பகப்பூவின் கஷாயத்தை காலை, மாலை குடித்து வர அனைத்து நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இதற்கு செண்பகப்பூவை கஷாயம் செய்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்த, நரம்புத் தளர்ச்சி நீங்கும்.செண்பகப்பூவை நீரில் ஊற வைத்து 30 மி.லி. அளவு குடித்து வர காய்ச்சல், வலி, குமட்டல் குணமாகும். இலைகளை அரைத்து அதன் சாறில் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

செண்பகப்பூ கஷாயம் பித்தத்தைக் குறைக்கும், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் தீர்க்கும். செண்பக இலையில் நெய்யை தடவி அதில் ஓமத்தைப் பொடி செய்து தூவி, தலையில் வைத்து கட்டிக் கொள்ள, அதிக வெப்பத்தினால் உண்டான தலைவலி, தலைபாரம் குறையும். செண்பகப்பூவை கஷாயம் செய்து அதில் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட கண்பார்வை தெளிவு பெறும்.,

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Advertisement

Related News