தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறைந்த விலை, அதிக சத்து!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரவல்லது கீரை வகைகள். சாதாரணமாக தோன்றினாலும் கீரைகள் பல சத்துக்கள் கொண்டவை. குறிப்பாக சில கீரைகள் உடலுக்கு பலவித சத்துக்களை வழங்கி, உடல் நலத்தை காக்க வல்லதாகும்.

முளைக்கீரை: வைட்டமின் ஏ, பி யுடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ேபான்ற சத்துக்கள் நிறைந்தது. கண் பார்வையும், நரை முடி ஏற்படாமலும் உதவும். பலம் பொருந்திய எலும்புகளைப் பெறவும், சரும நோயிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவக் கூடியது.

அகத்திக்கீரை: புத்தி மந்தம், நினைவாற்றல் குறைவு, சோம்பல், அறிவு தடுமாற்றம் போன்றவைகளை மாற்றக் கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. கால்சியம் சத்தை தந்து எலும்புகளை பலம் பொருந்தியதாக்கும்.

அரைக்கீரை: உணவில் சேர்ப்பதால் உடலில் உயிரணுக்கள் கூடும். நரம்பு தளர்ச்சியைப் போக்கி உடல் பலம் பெறச் செய்யும். வாயுத் தொல்லையை நீக்கும்.

புளிச்ச கீரை: உடலில் உஷ்ணம் இயற்கையான அளவில் இருக்க உதவக் கூடியது. சொறி, சிரங்குகளை நீக்கி சருமத்தை காக்கக் கூடியது.

பொன்னாங்கண்ணி: உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கண் சம்பந்தமான நோய்களை அகற்றக் கூடியது. உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும். புரத சத்து அதிகம் கொண்டதால், ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தக் கூடியது.

முருங்கைக்கீரை: அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ சத்தும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்தது. ஆதலால் நோய் எதிர்ப்பு சக்தி தருவதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, இதயத்துடிப்பை சீராக வைப்பதுடன் நரம்புகளுக்கும், பற்களுக்கும் பலம் தரக்கூடியது.

புதினா: வாந்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குறிப்பாக கருவுற்ற பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்தும். சமையலில் மணத்தையும், ருசியையும் அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.தினசரி உணவில் தவறாமல் ஒரு கீரையை சேர்த்து உண்போம். நலமுடன் வாழ்வோம்.

தொகுப்பு: எஸ்.ஆஷாதேவி, சென்னை.

Advertisement

Related News