தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிமோனியாவை வெல்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் உலகில் ஆண்டுதோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சம் பேர் நிமோனியாவால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை (ஐந்து வயதுக்குட்பட்ட) நிமோனியா காரணமாக மரணமடைகிறது என்கிறது இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ஆம் தேதி ‘‘உலக நிமோனியா தினமாக” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிமோனியா குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் அனந்தகிருஷ்ணன்.

நிமோனியா என்றால் என்ன?

நுரையீரல் திசுக்களில் ஏற்படும் அழற்சியே (வீக்கம்) நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப்படுகின்றன. அதாவது, நாம் காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நிமோனியாவை ஏற்படுத்துகின்றன. பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாதான் பரவலாக காணப்படுகிறது. வைரல் நிமோனியா சமீபகாலமாக கோவிட் வைரஸூடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதைத்தவிர, பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா குறைந்தளவிலேயே காணப்படுகிறது. பூஞ்சையால் ஏற்படும் நிமோனியா, ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விட்டாலோ அல்லது எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது அதிகளவிலான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் போன்றவற்றால் வருகிறது.

நிமோனியாவின் அறிகுறிகள்

நிமோனியாவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். பொதுவாக நுண்ணுயிரிகளின் வகை மற்றும் உடல்நிலையை பொருத்து நிமோனியா அறிகுறிகள் காணலாம். இது இருமல், குளிர் காய்ச்சல், நடுக்கம், கை, கால் விரல்களில் நீலம் கோர்ப்பது, வேகமாக மூச்சுவாங்குதல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு அதிகளவு வியர்வை வெளியேறுதல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நெஞ்சு வலி, பசியின்மை உடல் சோர்வு அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை நிமோனியாவின் அறிகுறிகளாகும்.

நிமோனியாவின் வகைகள்

நிமோனியா வகைகள் இவ்வளவுதான் என்று வரையறுக்கப்பட முடியாது. ஏனென்றால், அது பரந்து விரிந்துள்ளது. உதாரணமாக பாக்டீரியா நிமோனியா என்று எடுத்தால், ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கிறது. அதில் எதில் வேண்டுமானாலும் நிமோனியா வரலாம். அதுபோன்று வைரஸிலும் ஏராளமான வைரஸ் இருக்கிறது. அதிலும் எதில் வேண்டுமானாலும் நிமோனியா வரலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பாக்டீரியல், வைரல், பங்கல், ஏடிபிகல் என்று நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

நிமோனியா யாரையெல்லாம் அதிகம் தாக்குகிறது?

நிமோனியா ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதைக் கடந்தவர்களையுமே அதிகம் பாதிக்கிறது. அதாவது, உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நிமோனியா வர வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பினிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் ஸ்டிராய்ட்ஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு. மேலும், நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் 90 சதவிகிதம் இந்த நோயினால் தாக்கப்படலாம். அதுபோன்று எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களையும் நிமோனியா தாக்கலாம்.

சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்

நிமோனியா பாதித்த ஒருவருக்கு மூச்சு விடுதலின் அளவு முதலில் பார்க்கப்படும். 16-20க்குள் இருக்க வேண்டும். அதுவே, 30க்கு மேல் இருந்தாலும், ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழே இருந்தாலும் எக்ஸ்ரே பார்க்கப்படும். ரத்த அழுத்தம் பார்க்கப்படும். அதில் எந்த வகையான நிமோனியா என்பதை கண்டறியப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். பாக்டீரியில் நிமோனியா என்றால், ஆன்டிபயாடிக் கொடுக்கப்படும். வைரல் நிமோனியாவாக இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படும்.

நிமோனியா தீவிரமாக இருந்தால், வெண்டிலேட்டர் கொடுக்கப்படும். அதன்பிறகு நுரையீரல் எந்தளவு பாதித்துள்ளது என்பதை சிடி ஸ்கேன் மூலம் கண்டறியப்படும். இது தவிர, பரான்ஸ்கோ ஸ்கோபி என்ற சோதனை மேற்கொள்ளப்படும், இது நுரையீரலுக்குள்ளே டியூப்பை செலுத்தி அதன்மூலம் சளி எடுத்து சோதனை செய்யப்படும் பரிசோதனையாகும். நோய் அதி தீவிரமாக இருக்கிறது என்றால் எக்கோ எடுத்து பார்க்கப்படும்.

நிமோனியா, கொரோனா, பன்றி காய்ச்சலுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசம்

நிமோனியாவுக்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொரோனா என்பது கோவிட் வைரஸால் உண்டாகிற ஒரு வைரல் காய்ச்சல். நிமோனியா என்பது வைரஸ் பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று நோயாகும். இதைத்தான் நிமோனியா காய்ச்சல் என்கிறோம். அதாவது, டைபாய்ட், டெங்கு வரும்போது எப்படி காய்ச்சல் வருகிறதோ அப்படித்தான் நிமோனியா வரும்போதும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இதில் நிமோனியாவுக்கும், கொரோனாவுக்கும் உள்ள ஒற்றுமை என்றால், கொரோனா ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் ஒருவரது உடலில் போய் நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது. அந்த நேரத்தில் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத்தான் கோவிட் தொடர்புடைய நிமோனியா என்கிறோம். இவ்வளவுதான் நிமோனியாவுக்கும் கொரோனாவுக்கும் உள்ள தொடர்பு. அதுபோன்று பன்றி காய்ச்சல் ஏற்படும்போது, எச் 1 என் 1 நிமோனியா பாதிக்கிறது.

நிமோனியா தடுப்புமுறைகள்

நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். இது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு சரியான கால அளவில் நிமோனியா தடுப்பு ஊசி கட்டாயம் போடவேண்டும். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி இருக்கிறது. இது வாழ்நாளில் ஒரேயொரு முறை போட்டுக் கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. முதியவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப்படுகிறது.

சாதாரணமாக காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் கூட, அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது. தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுத்தம் பேணிவந்தால் நிமோனியாவை வரவிடாமல் தடுக்கலாம்.

மேலும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள், அதிகளவில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள், புகைப்பிடித்தலால் பாதிப்பு இருப்பவர்கள், காச நோய்பாதிப்பு இருப்பவர்கள் போன்றோர் இந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: தவநிதி

Advertisement