தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சச்சினை பாதித்த இம்போஸ்டர் சிண்ட்ரோம்!

Advertisement

நன்றி குங்குமம் டாக்டர்

ஓர் உளவியல் பார்வை!

“எனக்கு ஏன் இத்தனை பாராட்டுக்கள் கிடைக்கின்றன? இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேண்டாமா? நான் இதற்கு தகுதியானவன் தானா அல்லது அதிர்ஷ்டமா? ஒருவேளை நான் தகுதியில்லாதவன் என கண்டுபிடித்துவிட்டால் என்னவாகும்?’

உங்கள் பணியிடத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில், இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், தொடர்ந்து மனதில் தோன்றினால், அது ‘இம்போஸ்டர் சிண்ட்ரோமாக’ (Imposter Syndrome) இருக்கலாம். ஆனால், இதை நீங்கள் மட்டுமல்ல, வாழ்வில் சாதித்த அல்லது சாதிக்க வேண்டுமென நினைக்கும் தனிநபர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்கொண்டிருப்பார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.

‘நான் இந்த இடத்திற்கு தகுதியானவன் இல்லை’- சாதனையாளர்களிடம் இந்த எண்ணம் எந்தளவுக்கு பொதுவானது என்றால், சச்சின் டெண்டுல்கரே இதை தனது கிரிக்கெட் வாழ்வில் இதனை எதிர்கொண்டிருக்கிறார்.இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு குறித்து நாம் தனியாக விவரிக்கத் தேவையில்லை. 1989ஆம் ஆண்டு, அப்படிப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். 16 ஆண்டுகள், 205 நாட்களே நிரம்பிய ஒரு சிறுவனுக்கு முதல் சர்வதேச போட்டியே, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி எனும்போது சச்சின் மீது பலரின் கவனம் இருந்தது.

“நான் முதல் முறையாக பேட் செய்ய மைதானத்திற்கு சென்றபோது, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணிக்கு 90-95 மைல் வேகத்தில் வரும் பந்துகளை நான் எதிர்கொள்ள மிகவும் தடுமாறினேன். 15 ரன்களில் அவுட்டாகி விட்டேன்.பெவிலியன் நோக்கிச் செல்லும்போது, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அறைக்குச் சென்று, கண்ணாடியைப் பார்த்து அழுதேன். ‘இது உனக்கான வேலை இல்லை, இந்த வாய்ப்பிற்கு நீ தகுதியானவன் இல்லை’ என்று என்னைத் திட்டிக்கொண்டேன்” என்று ஒரு நேர்காணலில் தனது முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசியிருப்பார் சச்சின்.

ஆனால், ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை, அவரை சாதனையாளர் ஆக்கவில்லை, அதைக் கடந்து வர முடிந்ததால்தான் அவர் ஜெயித்தார். அது எப்படி என்பதைப் பார்க்கலாம். ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என்பதற்கான விளக்கம் முதன்முதலில் 1978ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த சுசான் ஐம்ஸ், பவுலின் ரோஸ் கிளான்ஸ் எனும் இரு உளவியலாளர்களால் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் பெண்களிடையே (குறிப்பிட்ட குழுவிடம்) அவர்கள் நடத்திய ஆய்வில், ‘பல பெண்கள் வாழ்வில் வெற்றி பெற்றிருந்தும்கூட, தங்கள் சொந்தத் திறமையை நம்பாமல், அந்த வெற்றிக்கு அதிர்ஷ்டம் அல்லது வேறு சில காரணங்கள் இருப்பதாக நம்பியது’ கண்டறியப்பட்டது.தங்களது ஆய்வின் அடிப்படையில், ‘சாதிக்கும் பெண்களிடையே இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ குறித்த ( The Impostor Phenomenon in High Achieving Women: Dynamics and Therapeutic Intervention) ஆய்வுக் கட்டுரையை அவர்கள் வெளியிட்டனர்.

“இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது மனநோய் அல்ல, ஆனால் ஒரு மனநோயின் பகுதியாக அது இருக்கலாம். அதை ஒரு தனிநபரே சரிசெய்துகொள்ள முடியும். அதை கண்டுகொள்ளாமல் விடும்போது நாள்பட்ட மனச்சோர்வாக மாறவும் வாய்ப்பு உள்ளது.” என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்தப் பிரச்னையின் முதல் அறிகுறியே சுய சந்தேகம்தான் என்கிறார்கள். “தனது திறமை, அறிவு, சாதனை குறித்து அவர்களுக்கு பெரும் சந்தேகம் இருக்கும். தான் வாழ்வில் எதுவுமே பெரிதாக சாதிக்கவில்லை, இதுவரை சாதித்ததற்கு அதிர்ஷடமோ அல்லது பிறரது உதவிகளோ தான் காரணம் என நினைப்பார்கள். என்றாவது ஒருநாள் இது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், என்னை மோசடிக்காரன் (ஃபிராடு) என எண்ணி விடுவார்கள் என்ற பயத்தில் இருப்பார்கள்” என்று இம்போஸ்டர் சிண்ட்ரோம் பாதிப்பு குறித்து விளக்குகிறார்கள்.

இத்தகைய சுய-சந்தேக உணர்வுகள், பதற்றம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்றும், வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் ‘ரிஸ்க்’ எடுக்கக்கூடிய தைரியத்தை அது குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்கள்.இந்த எண்ணங்களுக்கான காரணம் என்ன? பெற்றோர் வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் வளர்ந்த சூழல், (உதாரணத்திற்கு தன்னடக்கமாக இருப்பதே சிறந்தது என்ற பொதுப்புத்தி), பணியிடச் சூழல் மற்றும் அழுத்தம், ‘பெர்ஃபக்டாக’ (Perfect) இருப்பதே வெற்றி என்ற எண்ணம், போன்றவைதான்.

அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். வேலரி யங் என்பவர், இம்போஸ்டர் சிண்ட்ரோம் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம் இன்ஸ்டிடியூட்’ எனும் அமைப்பின் இணை நிறுவனரான இவர், இந்த சிண்ட்ரோம் தொடர்பாக ‘The Secret Thoughts of Successful Women’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் இம்போஸ்டர் சிண்ட்ரோமை 5 வகைகளாகப் பிரிக்கிறார்.

1. ‘தி பெர்ஃபக்சனிஸ்ட்’ (The Perfectionist)

“நான் இதைச் சரியாக அல்லது பரிபூரணமாக செய்யவில்லை என்றால், நான் ஒரு தோற்றுப்போனவன்”, இதுவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணமாக இருக்கும்.

‘பெர்ஃபக்ஷனிஸ்ட்’ என்பவருக்கு எந்த ஒரு வேலையையும் 100 சதவீதம் செய்ய வேண்டும். இதனால் அவர் தனக்குத் தானே, கடினமான அல்லது அசாத்தியமான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வார். தான் நினைத்ததில் ஒரு சதவீதம் குறைந்தாலும், அதை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்வார். அவர் செய்த 99% செயலுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இது எனக்கானதல்ல, நான் திறமையற்றவன் என்ற எண்ணமே மேலோங்கும். காரணம், அவர் தவறவிட்ட அந்த 1%.

நம்மில் பலரும் ‘பெர்ஃபக்ஷனிஸ்ட்’-ஆக இருப்பது பெருமை என நினைக்கிறோம். ஆனால், அவர்கள் 100 சதவீதம் வேண்டும் என்பதற்காக பெரும் மனஅழுத்தத்தை எடுத்துக்கொள்வார்கள். இதனால் வேலையை தள்ளிப்போடுவார்கள் அல்லது தனது வேலையை திருத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அதிக நேரம் வேலை செய்வதால், மனச்சோர்வுக்கு ஆளாகி, வேலையை வெறுக்கும் நிலை கூட ஏற்படும்.

தீர்வு: உண்மையில் பெர்ஃபக்சனிஸம் (Perfectionism) அல்லது பரிபூரணம் என்பது வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். எனவே முழுமை என்பதைவிட ‘ஒரு வேலையில் முன்னேற்றம்’ இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.தவறுகள் என்பது திறமையின்மை அல்லது தகுதியின்மையை குறிக்காது, அவை வளர்ச்சியின் ஒரு பகுதியே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

2. சூப்பர்வுமன்/சூப்பர்மேன்

“நான் வாழ்க்கையில் எந்த வேலையில், பதவியில், குடும்ப உறவுகளில் அல்லது எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு நான் சிறந்து விளங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ‘என்னால் முடியும்’ அல்லது ஆம் (Yes) சொல்லவேண்டும். பல வேலைகளை ஒரு சேர பார்க்கவேண்டும். என்னை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நான் சரியான ஒரு நபர் அல்ல, ஏமாற்றுக்காரன்”- இதுவே இந்த வகை பாதிப்பின் வெளிப்பாடு.

தான் ஒரு ஏமாற்றுக்காரர் அல்ல என்பதை நிரூபிக்க, மற்றவர்களைவிட கடினமாக உழைக்க, தங்களை அவர்கள் வருத்திக்கொள்வார்கள். அவர்களால் யாருக்கும் முடியாது (No) என சொல்ல முடியாது. ஓய்வு எடுக்க அல்லது உதவி கேட்க தயங்குவார்கள். எல்லா நேரமும் வேலை செய்வதுதான் மதிப்பு என நினைப்பார்கள்.

தீர்வு: எல்லா நேரமும் வேலை செய்வது அல்லது அதிக வேலை செய்வது என்பது பெருமையான விஷயம் அல்ல, ஓய்வு அல்லது ‘முடியாது’ எனச் சொல்வது மோசமான விஷயமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேலைகளை குறைத்துக்கொள்வதால், எது முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.

3. ‘தி எக்ஸ்பெர்ட்’ (The Expert)

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதுகுறித்த அனுபவம் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வாறு ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தெரியவில்லை என்றால் அதை அவமானமாக கருதுவீர்கள். எங்கே உங்களை ஏமாற்றுக்காரர் அல்லது அனுபவமற்றவர் என்று கூறிவிடுவார்களோ என்ற பயம் ஏற்படும்.ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் அதைப் பற்றி 100 சதவீதம் தெரிந்தால் மட்டுமே செயலில் இறங்குவேன் என நினைப்பது”- ‘தி எக்ஸ்பெர்ட்’ வகை இம்போஸ்டர் சிண்ட்ரோம் குறித்து டாக்டர். வேலரி இவ்வாறு விவரிக்கிறார்.

தீர்வு: கற்றலுக்கு எல்லையே கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை விட, நமக்கு தெரிந்ததை தன்னம்பிக்கையோடு வெளிப்படுத்த வேண்டும். ஒரு வேலையை செய்யும்போது கூட கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும்

4. ‘தி ஸோலோயிஸ்ட்’ (The Soloist)

ஒரு வேலையைத் தனியாகத்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அப்படி உதவி கிடைத்து, அந்த வேலை வெற்றிபெற்றால், அதற்கான பாராட்டைப் பெற மறுப்பீர்கள். அதாவது தனியாக செய்தால் மட்டுமே அது வெற்றி. உங்கள் மனதில், நீங்கள் சொந்தமாக செய்த சாதனைகள் மட்டுமே கணக்கில்கொள்ளப்படும். இதுதான் ‘தி ஸோலோயிஸ்ட்’ வகைக்கான விளக்கம்.

தீர்வு: உண்மையில் திறமையானவர்கள் தங்களுக்கு என்ன உதவி தேவை என்பதை கேட்டுப் பெறுவார்கள் என்பதை உணர வேண்டும். தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லையென்றால் அதை தெரிந்தவரிடம் கேட்கலாம். கூட்டு முயற்சி என்பது ஒரு பலம், பலவீனம் அல்ல என்ற புரிதல் அவசியம்.

5. ‘தி நேச்சுரல் ஜீனியஸ்’ (The Natural Genius)

நான் ஒரு விஷயம் செய்தால், அது எனக்கு எளிதாக இருக்கவேண்டும். நான் இயற்கையிலேயே புத்திசாலி என்பதால் அது கடினமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அல்லது நான் தடுமாறினால், இது எனக்கானது இல்லை. இதுதான் ‘தி நேச்சுரல் ஜீனியஸ்’ வகைக்கான விளக்கம்.

தீர்வு: ஒரு வேலையில் அல்லது கலையில் நிபுணத்துவம் பெறுவது என்பது பிறப்பில் வரும் திறமை அல்ல. அதை கொஞ்சம் கொஞ்சமாகதான் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு வேலையில் தடுமாறுகிறீர்கள் என்றால், அதை நடைமுறையில் சரிசெய்ய என்ன செய்யலாம், எங்கே தவறு என யோசிக்க வேண்டும். அதை விட்டு வெளியேறுவது ஒரு தீர்வு அல்ல.

தொகுப்பு: சரஸ்

Advertisement

Related News