தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெந்நீர் மருத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை எரிப்பதை துரிதப்படுத்தும். உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது முழுமையான உணர்வை உருவாக்குகிறது. அதிக உணவு உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. மற்றும் சூடான நீர் எடை இழப்புக்கு உதவுகிறது. கூடுதலாக, வெதுவெதுப்பான நீர் செரிமானத்திற்கு உதவுகிறது, வீக்கம் மற்றும் மலச்சிக்கல், எடை குறைப்புக்கான பொதுவான தடைகள் ஆகியவற்றைக் குறைக்கிறது.

பயன்படுத்தும் முறைகள்

*சுக்கு கலந்த வெந்நீரை குடித்து வந்தால் வாயுத்தொல்லை விலகும்.

*விருந்து சாப்பிட்டபின் வெந்நீர் குடித்தால் எளிதில் செரிமானமாகும்.

*அடிக்கடி வெந்நீர் குடித்தால் செரிமானமின்மையால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

*வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றி உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

*வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி குறைய மிதமான சூட்டில் வெந்நீரை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும்.

*சாப்பிடுவதற்கு அரை மணி முன்னால் 1 டம்ளர் வெந்நீர் குடிக்க உடல் எடை குறையும்.

*1 தேக்கரண்டி பார்லி வேகவிட்ட வெந்நீரை குடித்தால் சருமம் மிருதுவாகும்.

*வெந்நீரில் தேன் கலந்து அருந்த உடல்எடை குறையும்.

*தலைவலியால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்படும்போது வெந்நீரில் விக்ஸ் அல்லது நொச்சி இலை போட்டு ஆவி பிடிக்க, தலைவலி குணமாகும்.

*1 தேக்கரண்டி காபித்தூள், 1 கிராம்பு, லவங்கப்பட்டை போட்டு கொதிக்க வைத்த இளம் சூடான வெந்நீரை குடிக்க, தலைவலி குணமாவதோடு செரியாமையால் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாகும்.

* சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரை தினமும் அருந்திவர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

*வெந்நீர் குடிப்பது சளிக்கு சிகிச்சையளிப்பதற்கும் நாசி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நன்மை பயக்கும். இது வீக்கத்தைக் குறைக்கிறது. கட்டிப்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. மற்றும் சைனஸ் அழுத்தத்தை நீக்குகிறது.

*ஒரு கப் கொதிக்கும் நீரால் உருவாகும் நீராவியை உள்ளிழுப்பது, சைனஸை அழிக்கவும், சைனஸ் தலைவலியை எளிதாக்கவும் உதவும். கூடுதலாக, காலையில் வெறும் வயிற்றில், சூடான எலுமிச்சை நீர் அருந்த, அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்பிரமணியன்