தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டு வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆகச் சாப்பிட வேண்டியவை

ஒன்பதாவது மாதம் முதல் குடிக்க வேண்டிய கஷாயம் சீரகம் அல்லது சோம்பு கஷாயம். ஒரு தேக்கரண்டி சீரகம் அல்லது சோம்பு வெறும் வாணலியில் வறுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்கவிட்டு ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மாலை வேளையில் பருகி வரலாம். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

கறிவேப்பிலைக் காம்பு அல்லது முருங்கைக்காம்பு கஷாயம்

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலைக்காம்பு அல்லது முருங்கைக்காம்பு வெறும் வாணலியில் வறுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்கவிட்டு, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மாலை வேளையில் பருகி வரலாம். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

மலச்சிக்கல் சரியாக...

இரவில் திராட்சையை ஊறவைத்து காலையில் அதை மசித்துவிட்டு நீரை அருந்தி வர மலச்சிக்கல் சரியாகும்.

இருமல் - சளி குணமாக...

குப்பை மேனிச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பற்று இட இருமல் கட்டுப்படும்.

வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர இருமல் நிற்கும்.

முருங்கை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உள்ளங்கையில் உப்பு சேர்த்து கசக்க முருங்கைச்சாறு வரும். அதனை ஒரு தேக்கரண்டி அளவு குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தால் அதை குடித்ததும் வாந்தி மூலம் சளி வெளியேறும். அல்லது மலத்துடன் சளி வெளியேறும்.

தேங்காய் எண்ணெயைச் சூடு செய்து அடுப்பை அணைத்து பின், பச்சைக்கற்பூரம் சேர்த்து சூடு பொறுக்க நெஞ்சில் தேய்த்தால் நெஞ்சுச் சளி குறையும். இதனை ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டும் சளி பிடிக்கும் சமயத்தில் நெற்றி, மூச்சு, நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் தடவி வரலாம்.

வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு இவற்றைத்தட்டி வெந்நீரில் போட்டுக் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க சளி மட்டுப்படும். துளசி, சித்தரத்தை, மிளகு இவற்றை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அரைபாகத்திற்கு வற்றவைத்து வடிகட்டி குடிக்க சளி தொந்தரவு சரியாகும்.

பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சமைக்காமல் சாப்பிடப் பழக வேண்டும். சமைக்காத உணவுகளில் மட்டுமே உயிர்சக்தி நிறைந்து இருக்கும். மூன்று வேளையும் முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு வேளை உணவைச் சமைக்காத இயற்கை உணவாக எடுத்துக் கொண்டால் நலமாக இருக்கும். மேலும் எந்த உணவையும் நன்கு மென்று சாப்பிட்டுவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொகுப்பு: ரிஷி