தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூலிகை வைத்தியம்

Advertisement

நன்றி குங்குமம் தோழி

தும்பை: சளி, இருமல், தலைவலி, தலைபாரம், நீர்க்கோவை போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும் சிறந்த மூலிகை. உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். இதை

கஷாயமாக்கி பருகலாம்.

வில்வம்: காய்ச்சல், மஞ்சள் காமாலை, அனீமியா போன்றவற்றிற்கும், காலரா தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. இதை கஷாயமாக குடிக்கலாம்.

தூதுவளை: தூதுவளையின் இலை, பூ, பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தூதுவளை இலைப் பொடியை பாலில் கலந்து குடிக்க இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும். இதன் பழத்தை நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.

மஞ்சள் கரிசாலங்கண்ணி: மஞ்சள் காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு போன்றவற்றிற்கு இக்கீரையை சமைத்து சாப்பிட சிறந்தது.

அவுரி இலை: தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் அனைத்துக்கும் நன்மை தரும். வயிற்றில் உள்ள எல்லாவிதமான கெட்ட கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுகுறிஞ்சான்: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை குறைக்கும். கொழுப்பைக் குறைக்கும். ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி வைரல் பண்புகளை கொண்டுள்ளது.

முள் முருங்கை: கல்யாண முருங்கை என அழைக்கப்படும். இது பித்தத்தை போக்கி, நரை வராமல் தடுக்கும். காய்ச்சலை குறைக்கும். உடலிலுள்ள வீக்கத்தை குறைக்கும்.

முடக்கத்தான் கீரை: இக்கீரையை அடிக்கடி உணவில் சாப்பிட மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.

Advertisement

Related News