தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அஞ்சறைப் பெட்டி ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

வயிற்றுவலி, தலைவலி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு டாக்டரை அணுக வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியை திறந்தாலே அதற்கான தீர்வு கிடைக்கும்.

* ஒரு வெற்றிலையில் ஒரு தேக்கரண்டி ஓமம், 2 கல் உப்பு வைத்து மடித்து சாப்பிட வயிற்று வலி பறக்கும். தொப்புளை சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவினாலும் குணமாகும். சாதம் கொதிக்கும் கஞ்சி, பனங்கற்கண்டு, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சிறிது சூட்டோடு குடிக்க வலி பறந்து போகும்.

* அரை கப் தயிரில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட அடிவயிற்று வலி, சீத பேதி மறையும்.

* சீரகத்தைப் பொடித்து உப்பு சேர்த்து சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சுடு சாதத்தில் சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட வயிற்று உபாதைகள் மறையும்.

* தண்ணீரில் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.

* சூடான நீரில் சுக்குப் பொடி சேர்த்து அருந்தினால் வாயு தொல்லை நீங்கும். சுக்குப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட உணவு எளிதில் செரிமானமாகும்.

* சளியுடன் கூடிய இருமலுக்கு சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.

* கசகசாவை பாலில் அரைத்து அருந்த உடல் குளிர்ச்சியாகும்.

* இஞ்சி, தனியா, சீரகம் இவற்றை நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து அருந்த பித்த வாந்தி குணமாகும்.

* வேப்பங்கொட்டை, சுக்கு கொர கொரப்பாக இழைத்து பூச தலைவலி காணாமல் போகும்.

தொகுப்பு: சுதா, சென்னை.