தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நலம் காக்கும் கை வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

* சில்லென்று தண்ணீரை குடித்துக் குடித்து தொண்டை கமறல் ஏற்பட்டால் உப்பு கலந்த வெது வெதுப்பான நீரால் (அடிக்கடி வாயில் தொண்டையில் படும் வரை) கொப்பளித்து, துப்புங்கள்.

* கண் எரிச்சலை தடுப்பதற்கு உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து வில்லைகளாக நறுக்கி, கண்களின் மேல் போட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க கண் எரிச்சலை சரிசெய்ய முடியும்.

* வெள்ளரியையும் வில்லைகளாக நறுக்கி கண்களின் மீது வைத்து மெல்லிய துணியால் கட்டிவிட்டு படுத்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

* கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவி வர, கண் எரிச்சல் அடங்கும்.

* நீர்மோரில் வெள்ளரித்துண்டு சப்ஜா விதைகளைப் போட்டுப் பருக தாகம் தணியும்.

* உலர்ந்த வேப்பம் பூவில் 50 கிராம் அளவு எடுத்து, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறிய பிறகு, வேப்பம் பூ எண்ணெய் இரண்டையும் தலையில் நன்றாகத் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர், சீயக்காய்ப் பொடியைத் தேய்த்துக் குளித்தால், பொடுகு பிரச்னை தீர்ந்துவிடும். இவ்வாறு வாரத்திற்கு ஓரிரு முறை என மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு நீங்கிவிடும்.

* காலையில் மாவுச்சத்து நிறைந்த அரிசிச் சோறு, இட்லி தோசைக்குப் பதிலாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்களைச் சாப்பிடுங்கள். நல்ல சத்து கிடைத்துவிடும். எளிதில் செரிமானம் ஆகி, பகலில் நன்றாகப் பசிக்கவும் செய்யும். இவ்வாறு செய்தால், மூன்று நாட்களில் முகம் பொலிவு பெறுவதை நீங்களே காண்பீர்கள்.

* கை, கால், விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு எந்த மருந்தும் தேவையில்லை. மிதமான வெந்நீரில் கல்லுப்பு எலுமிச்சைச்சாறு கலந்து சற்று கை, கால்களை சில நிமிடங்கள் வரை வைத்திருந்து பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவுங்கள்.

காலையில் எழுந்ததும், பல்லைத் துலக்கி விட்டு ஒரு லிட்டர் தண்ணீரைக் குடியுங்கள். அப்படி பழக்கம் இல்லாதவர் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தால், குமட்டலாம். வாந்தி கூட வரலாம். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துப் பழகிக் கொள்ளுங்கள். சில நாட்களில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க முடியும். அவ்வாறு குடித்து வந்தால், பிற்பகல் வரையிலாவது, நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைப் பார்ப்பவரே கண்டுபிடித்துக் கூறிவிடுவர். ஆனால், அதற்குக் காரணம் தண்ணீர்தான் என்பதை மட்டும் பிறர் அறிய முடியாது.

Related News