தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாட்டி வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

* பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும்.

* வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

* தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்திருந்து பின் குளித்தால் பொடுகு நீங்கும்.

* ஒரு கப் ஆப்பிள் சாறுடன் ½ கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.

* சின்ன வெங்காயத்தை உரித்து அரைத்து, தலையில் தடவி வைத்திருந்து குளித்து வர பொடுகு நீங்கும்.

* வெந்தயத்தை ஊறவைத்து, அத்துடன் நெல்லிக்காய் சேர்த்து அரைத்தெடுத்து, வாரம் இருமுறை தலையில் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும்.

* வால் மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரம் போட்டுக் காய்ச்சி ஆறியதும் தலையில் தேய்த்து வைத்திருந்து ½ மணி நேரத்திற்குப் பிறகு தலையை அலசி வந்தால் பொடுகு தொல்லை குணமாகும்.

* புதினா இலையை உலர்த்தி அம்மியில் பொடித்து பல் துலக்கினால் ஈறு பலம் பெறும்.

* இரண்டு கரண்டி கறிவேப்பிலை சாற்றில் ஒரு டம்ளர் மோர் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, தேனி.

 

Advertisement