தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூப்பெய்துதல் சரியான வயதில் நிகழ…

Advertisement

நன்றி குங்குமம் டாக்டர்

இக்காலத்தில் சிறுமியர் பத்து, பதினொறு வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர். இதற்கு பரம்பரை ஒரு முழுக்காரணமாக சொல்லப்பட்டாலும், சிறுமியரின் அதிக உடல் எடை, ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்மை என பல காரணங்கள் உள்ளன. இதுவே, சில வீடுகளில் சிறுமியர் பதினாலு, பதினாறு வயதானாலும் பூப்பெய்தாமல் இருப்பர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, மனம் வருந்திக் கொண்டிருப்பர். இதைப் போக்க சில வழிமுறைகள்.

கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது படிகாரம் தூவி, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம். ஆலம் வேரை வாங்கி மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். இந்தப்பொடியை 200மிலி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்ட விடவும். இதை வடிகட்டி குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். முருங்கை இலை அல்லது கல்யாண முருங்கை இலையை அரைத்து 30மிலி அளவில் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதேபோல், மிதிபாகல் சாறையும் அருந்தலாம்.

பப்பாளி காயை கூட்டு செய்து சாப்பிட்டு வரவும்.முள்ளங்கியோடு 5 கிராம் இஞ்சியை சேர்த்து அரைத்து சாறாக்கி மோரில் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

1 டீஸ்பூன் மஞ்சள்தூளுடன் சிறிதளவு பனைவெல்லம் அல்லது தேனும், தே.பாலும் கலந்து சாப்பிடலாம். கறுப்பு உளுந்து, கறுப்பு எள், முருங்கைக்கீரை, ஆளிவிதை, எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் இவற்றை ஏதாவது ஒரு வழியில் எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

கறுப்புத் திராட்சையை தோல், விதையோடு சேர்த்து அரைத்து பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை தொடர்ச்சியாக அருந்தலாம். தனியா, சோம்பு இவற்றை கரகரப்பாக பொடித்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் டீ மாதிரி அருந்தலாம். பேரீச்சம் பழத்தை தினசரி இரவு இரண்டு சுளைகள் சாப்பிட்டு வரலாம்.ஆலிவ் எண்ணெய் சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு உடலில் சூட்டைக் குறைத்து ஆரோக்கியமான உடல் வெப்பத்தைப் பராமரிக்கிறது. மேலும், இதில் உள்ள ஒலியிக் சத்து கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.

தொகுப்பு: மகாலக்‌ஷ்மி சுப்ரமணியன்

Advertisement

Related News