தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

நன்றி குங்குமம் தோழி

அவரைக்காய் சாதாரணமாக கிடைக்கும் காய் வகையாகும். இதில் பல வகைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் பலன்கள் ஒன்று போலவே இருக்கும். இருப்பினும் மருத்துவ முறைக்கும், பத்திய உணவுக்கும் பச்சை நிற அவரைப் பிஞ்சுகளே சிறந்ததாக கருதப்படுகிறது.

*கண் வலி, கண் பார்வை மங்கல், கண்ணில் குத்துதல் போன்ற உணர்வு, கண்கள் சிவப்பு நிறமுண்டாவது, கண்ணீல் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதில் முதலிடம் பெற்றது அவரைக்காய்.

*வாத சம்பந்தமான வியாதிகள் உள்ளவர்கள் தொடர்ந்து அவரைப் பிஞ்சை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வியாதி குணமாகிவிடும்.

*உடம்பில் ரணம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு மருந்து தடவி விடும் சமயம் பிஞ்சு அவரைக்காயை சுத்தம் செய்து, அத்துடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடலாம். எந்த வகையிலாவது அவரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரணம் ஆறிவிடும்.

*விதை பிடிக்காத பிஞ்சு அவரைக்காயைத்தான் மருத்துவ பயனுக்கு பயன்படுத்த வேண்டும். பூப்பிஞ்சைத்தான் பத்திய உணவிலும் சேர்க்க வேண்டும். விதை பிடித்த காய் மருந்தின் குணத்தை கெடுத்து விடும். உடல் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்றுப் போக்கையும் கொடுத்து விடும். ஆகவே விதை பிடிக்காத அவரைப் பிஞ்சை சாப்பிட்டு வந்தால் மருத்துவ பயனை முழுமையாக பெறலாம்.

- எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

Related News