தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தினசரி நடைப்பயிற்சி நலமே!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் தினசரி நடக்கும் தூரம் குறைந்துவிட்டதால்தான் வியாதிகள் அதிகரித்து விட்டது. எனவே, காலை வேளையில் எழுந்தவுடன் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பல நன்மைகளை தரும். அவற்றை தெரிந்து கொள்வோம்.தினசரி நடப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம். மாரடைப்புக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. நடைப்பயிற்சி இதயத் துடிப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுவாசத்தையும் மேம்படுத்துகிறது.

பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் அவதிப்படுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து ஓரளவுக்கு விடுபட முடியும்.தினசரி நடைப்பயிற்சி உடல் தசைகளை வலுவாக்கும். உடலை சமநிலைப்படுத்துகிறது. உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. தசைகளை ஆரோக்கியமாக்குகிறது. உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி ஒரு நல்ல வழி என்று சொல்லலாம். நடைப்பயிற்சி கலோரிகளை எரிக்கிறது. இதனால் எடை எளிதில் குறையும். காலையில் நடைப்பயிற்சி செய்வதால் பசியையும் கட்டுப்படுத்தலாம். நடைப்பயிற்சி உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வழக்கமான நடைப்பயிற்சி உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. கொழுப்பு சேர்வதே இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்க்குக் காரணம். நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மனச்சோர்வை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. காலையில் வெயிலில் நடப்பது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது. சூரிய ஒளியின் மூலம் உடலில் வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.

அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்றநேரம். இந்த நேரத்தில் சுற்றுசூழலில் மாசு குறைவாக இருக்கும். நடைப்பயிற்சி செய்யும்போது மென்மையான ஷூ பயன்படுத்தலாம். காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் சுவாச மண்டலம். இதய நாள மண்டலம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். நுரையீரலின் சுவாசத்திறன் அதிகரிக்கும். அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய் கட்டுப்படும். தூய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில், பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆரோக்கியமானது.

தினமும் குறைந்தது 30 நிமிடம் அதிகபட்சம் மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் 3 லிருந்து 5 கி.மீட்டர் நடக்க வேண்டும். தினமும் நடக்க இயலாதவர்கள் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடம் நடந்தாலும் நன்மைதான். சாப்பிட்டதும் குறுநடை செய்வது நலம். நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்க சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி, நெஞ்சு அடைப்பு, இதயபடபடப்பு, வழக்கத்திற்கு மாறாக அதிக வியர்வை தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம். நெஞ்சுவலி, முழங்கால் வலி, குதிகால்வலி போன்ற பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் நடக்கவும்.

தொகுப்பு: பொ. பாலாஜி கணேஷ்

Related News