தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பித்தத்தை குறைக்கும் தேங்காய்

 

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக தேங்காயை பலகார வகைகளுக்கும், சமையலுக்கும் ருசிக்காக பயன்படுத்துவர். ஆனால் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலவித நன்மைகளை பெறலாம்.

* நன்றாக முற்றின தேங்காயை உடைத்து துருவி, பால் எடுத்து, தினசரி காலையில் ஒரு கப் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல பலம் பெறும்.

* தேங்காய்ப்பாலுடன், எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

* வாத நோயினால் கஷ்டப்படுபவர்கள் தினசரி உணவில் தேங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் தணியும்.

* தேள் கொட்டி விஷம் ஏறி கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒன்பது மிளகை எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று சாப்பிட்டு விட்டு, ஒரு முற்றிய தேங்காயின் அரை மூடியை பல துண்டுகளாக்கி, நன்றாக மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கடித்த இடத்தில் ஏற்படும் கடுப்பு நின்று விடும்.

இப்படி பல வகை பயன்களும் தரக்கூடிய தேங்காயை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டு நன்ைமகளை பெறலாம்.- எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

எளிய வீட்டு வைத்தியம்

* வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்தால், பசி எடுக்கும். சோர்வு, மயக்கம் வராது.

* மூன்று (அ) நான்கு உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நார்ச்சத்து கூடும்.

* நார்ச்சத்து அதிகரிக்க தினமும் ஆரஞ்சு, பேரீச்சை பழங்கள் சாப்பிடலாம்.

* 10 அல்லது 15 துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால், சளி, இருமல் போய்விடும்.

* சிறிதளவு பூண்டு பல் எடுத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகினால் காய்ச்சல் பறந்து விடும்.

* முருங்கை இலை, கற்பூரவல்லி, பச்சை முள்ளங்கியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்தால் ரத்த அழுத்தம் குறையும்.- வாசுகி, சென்னை.

Related News