தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூப்பூவாய் பூத்திருக்கு…

நன்றி குங்குமம் தோழி

புளியம்பூ: பூவைச் சிறிது நெய் சேர்த்து வதக்கித் துவையலாக்கிச் சாப்பிட பித்த வாந்தி நிற்கும். இப்பூவை கஷாயமாக அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

சிற்றகத்திப்பூ: பூவை பால் சேர்த்தரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். பூவைக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, வடிகட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம் குணமாகும்.

அகத்திப்பூ: பூவை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட இதயம் பலம் பெரும். பூவைச் சாறு பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிட குடல் புண் ஆறும். வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

எள்ளுப்பூ: பூவை தினமும் உண்டு மோர் குடித்து வர, கண் நோய்கள் தீரும். எள்ளுப்பூ, மான் கொம்பு, பேரீச்சங்கொட்டை மூன்றையும் இழைத்து

தாய்ப்பாலில் குழைத்து கண்ணுக்கு மை போல் இட்டுக் கொண்டால் பார்வை தெளிவாகும்.

உசிலம்பூ: பூவை வேப்பம் பட்டையுடன் பசுவின் பால் விட்டு அரைத்து தடவி வர, உடலிலுள்ள தேமல் மறையும். பூவை அரைத்து வீக்கமுள்ள இடத்தில் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

வெங்காயப்பூ: பூவையும் வெங்காயத்தையும் சமஅளவு எடுத்து வதக்கி வெல்லம் கலந்துண்ண வரட்டு இருமல் குணமாகும். பூவையும் வெங்காயத்தையும் சாறாக்கி இரவில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் காச நோய் குணமாகும்.

மருதாணிப்பூ: தேங்காய்எண்ணெயை நன்றாகக் காய்ச்சி அதில் ஓரிரு கைப்பிடி பூவைப் போட்டு எண்ணெய் சிவந்ததும் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெய் கூந்தல் கருநிறமாக, செழித்து வளர உதவும். இரவில் தேய்த்துக் கொள்ள உறக்கம் வரும்.

தாமரைப்பூ: வெண்தாமரை பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி வரும் ஆவியை கண்களில் படும்படி செய்தால் கண்நோய்கள் குணமாகும். மண்பாண்டத்தில் கால் லிட்டர் நீரில் வெண் தாமரைப் பூக்கள் இட்டு சுண்டக் காய்ச்சினால் கிடைக்கும் கஷாயத்தை அருந்தினால் காய்ச்சல், இதயநோய் குணமாகும்.

முருங்கைப்பூ: பூவை அவியல், கூட்டு, பொரியல் என்று சமைத்து உண்ணலாம். நரம்புத் தளர்ச்சி, பித்தம் குணமாகும். கண் எரிச்சல் போகும். இதயத்திற்கு வலுவூட்டும். வெப்பம் தணியும். ஆரோக்கியம் பெருகும். பூவின் கஷாயம் மயக்கம், வாந்தியைக் குணப்படுத்தும்.

செம்பருத்திப்பூ: பூவைப் போட்டு காய்ச்சிய எண்ணெயால் கூந்தல் செழித்து வளரும். தலை குளிர்ச்சி பெறும். ரத்தம் சுத்தமாகும், இதயம் வலுவடையும். பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து கிரீன் டீ போல் குடிக்கலாம்.

- விசாலாட்சி கண்ணன், ஓசூர்.