தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராம்சீதா பழத்தின் நன்மைகள்!

Advertisement

நன்றி குங்குமம் டாக்டர்

*மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை தாயகமாகக்கொண்ட இப்பழம் இன்று இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தைவான், ஆப்பிரிக்கா நாடுகளில் பயிராகிறது.

*எட்டு மீட்டர் முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மஞ்சள் கலந்த பசுமை நிறப் பூக்கள் காணப்படும்.

*பழமானது மஞ்சள் சாயையுள்ள சிவப்பு நிறமாக, இதய வடிவத்துடன், 7.5 முதல் 12.5. செ.மீ. விட்டத்துடன் இருக்கும். பழச்சதை வெண்மை நிறமுடையது. பழச்சதையில் பல விதைகள் இருக்கும்.

*ஒரு பழம் சுமார் அரைகிலோ எடை கொண்டதாக இருக்கும்.

*ஒரு மரத்தில் 45 கிலோ பழங்கள் ஒரு ஆண்டில் கிடைக்கும். நட்ட இரண்டு ஆண்டுகளில் பழங்களை அறுவடை செய்யலாம்.

*ராம்சீதா பழத்தின் தாவரவியல் பெயர் அனோனா ரெடிகுலேட்டா என்பதாகும். இது அனோனசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

மருத்துவக் குணங்கள்:

*ராம்சீதா பழத்தில் தாதுச்சத்துகள், கொழுப்பு, நார், மாவுப் பொருட்கள் உள்ளன. பழத்தில் அயோடின், புளோபின் உள்ளன. பழம் பழுக்கும் போது அஸ்கார்பிக் அமிலம் அதிகமாகிறது.

*காய், கனி, இலை, பட்டை அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டது.

*பச்சைக்காயில் அதிக அளவு டானின் சத்து இருப்பதால் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகிறது.

*சீதா காயானது மண்ணீரல் வீக்கத்தை தணிக்கும்.பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் ரத்த விருத்தி ஏற்படும்.

*இப்பழம் வாந்தியை நிறுத்தும்.

*இப்பழத்திற்கு பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.

*இதயத்தை நன்கு செயல்பட வைக்கும்.

*காய்ச்சலின் போது ஏற்படும், தாகம், களைப்பை நீக்கும்.

*இப்பழம் உண்டு வர பசியைத் தூண்டும்.

*இலைகளை அரைத்து வயிற்றின் மேல் பூசிட அஜீரணம் மாறும்.

*பட்டையில் கசாயம் வைத்து பருக வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

*காயானது குடலிலுள்ள நாக்குப் பூச்சிகளை அழிக்கும்.

*இந்த ராம் சீதாபழத்தின் முற்றாத கனியிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் கறுப்புச் சாயம் எடுக்கப்படுகிறது.

*விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.

*இலைகள் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.

தொகுப்பு: சா.அனந்தகுமார்

Advertisement