தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரப்போகிறது புதிய வைரஸ் !

Advertisement

நன்றி குங்குமம் தோழி

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்பஇருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது. அதி பயங்கரமானது. விரைவில் வரலாம். வந்து மனித குலத்தை அச்சுறுத்தலாம், மக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவாய் மலர்ந்திருப்பவர் கேட் பிங்ஹாம் (Kate Bingham).கொரோனோ வைரஸ் 70 லட்சம் பேரை காவு வாங்கியது என்றால், வரப்போகிற இந்த புதிய வைரஸ் 5 கோடி பேரை காவு வாங்கும். ஆனால் இது எந்த வடிவத்தில் வரும் என்பதை நாம் இன்னும் உறுதியாக அறியவில்லை. ஆனால் இதன் வருகை, உலக சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, வாய்ப்பு மட்டுமல்ல, நிச்சயம் எனவும் அறிவிப்பு செய்திருக்கிறார்.

முன்னரே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் பேர்வழியென இப்படியாக திகில் கிளப்பிய இந்த கேட் பிங்ஹாம் யாருன்னு யோசிக்கிறீங்களா? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயாலஜி முடித்து, மேல் படிப்பாக எம்பிஏ படித்து, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் கால் பதித்த மிகப்பெரும் கோடீஸ்வரப் பெண்மணி.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இங்கிலாந்து நாட்டின் வேக்ஸின் டாஸ்க் போர்ஸ் (UK’s Vaccine Taskforce) தலைவராய் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனுடன்(WHO) இணைந்து கிட்டதட்ட மூன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கி விருதுகள் பல வென்ற பெருமைக்குரியவராக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் பெரிதும் மதிக்கப்படுபவர்.

இவர் இப்படியாக முன்னறிவிப்பு செய்தவுடன், ஐரோப்பிய ஊடகங்கள் புதிய வைரஸ் குறித்த செய்திகளோடு அலறிக்கொண்டிருக்க, வெளிநாட்டு செய்தி ஏஜென்ஸிகள் வழியாக இந்தச் செய்தி,

இந்திய ஊடகங்களிலும் வெளியானது.மக்களிடம் அச்சத்தை விதைத்து, திரும்பவும் ஒரு வேக்ஸினை உருவாக்கி உலகம் முழுவதும் விற்பதற்காக மருத்துவ மாஃபியாக்களின் சதி திட்டமாக இது இருக்குமோ எனவும் ஊடகங்களில் சிலர் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ? மறுபடியும் லாக்டவுனா என்பதே பலரின் பெருமூச்சாய் இருக்கிறது.

தொகுப்பு: மணிமகள்

Advertisement