தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெண்களின் உடல் கோளாறுகளை நீக்கும் அருமருந்து!

நன்றி குங்குமம் தோழி

பிரண்டை என்ற அற்புத மூலிகை பல உடல் கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உபாதைகளின் அருமருந்து.

*பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வெறும் வயிற்றில் பிரண்டைச் சாறு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டால் மாதவிடாய் சீராகும்.

*பிரண்டையை துவையலாக அரைத்து உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

*உடம்பில் அரிப்பு பிரச்னை இருந்தால் பிரண்டையை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

*மூட்டுவலி உள்ளவர்கள், பிரண்டையை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி, அந்த எண்ணெயை வடிகட்டி தேய்த்து வந்தால் வலி குணமாவதுடன் எலும்பு மற்றும் மூட்டு எலும்புகளுக்கு வலிமை தரும்.

*அடி வயிற்றுப்பகுதியில் சதை அதிகமாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் சதை களைந்து விடும்.

*பிரண்டையை காயவைத்து, நெருப்பில் எரித்து சாம்பலாக்கி, ஒரு பங்கு சாம்பலில் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி பத்து நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். நீர் வற்றி உப்பு மட்டும் தங்கி இருக்கும். அதில் இரண்டு கிராம் அளவினை பாலில் கலந்து சாப்பிட ஊளைச் சதை குறையும்.இப்படி பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படும் பிரண்டையை உணவில் சேர்த்து நோய்களிலிருந்து விடுபடுவோம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related News