தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வில்லிபுத்தூரில் குரங்குகள் அட்டகாசம்: தேர் உச்சியில் அமர்ந்து சேட்டை

 

Advertisement

வில்லிபுத்தூர், ஆக.18: வில்லிபுத்தூர் நகரில் கடந்த சில வாரங்களாக குற்றாலத்தில் இருந்து வந்த குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நகரில் ஆங்காங்கே மரங்களில் இந்தக் குரங்குகள் தங்கியுள்ளன. இந்த நிலையில் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் புகுந்து குழந்தைகளை மிரட்டுவது, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது என சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ரேஞ்சர் செல்லமணி உத்தரவின் பேரில் வனத்துறையினர் சில குரங்குகளை பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

இருப்பினும் மேலும் சில குரங்குகள் நகருக்குள் சுற்றி வருகின்றன. திடீரென தெருக்கள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி விட்டு செல்கின்றன. குழந்தைகள் கையில் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்துச் செல்கின்றன.

நேற்று காலை ஒரு குரங்கு ஆண்டாள் கோயில் தேர் உச்சிக்கு சென்று கலசத்தைப் பிடித்து கொண்டு சுமார் 3 மணி நேரம் சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. உயரமான இடங்களில் அமர்ந்துகொண்டு போவோர், வருவோரை கவனித்து உணவுப் பொருட்கள் கொண்டுவருவது தெரிந்தால் தாவிச் சென்று பறிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் சற்று அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தற்போது நகருக்குள் சுற்றிவரும் குரங்குகளையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement