ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம் மனு
ராஜபாளையம், டிச.13: ராஜபாளையம் 31வது வார்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள ஐந்து தெருக்களும் குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் இருந்து வருகிறது. தென்காசி சாலையில் இருந்து சங்கரன்கோவில் சாலைக்கு புறவழிச் சாலைகள் இல்லை. இதன் காரணமாக அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சியில் புதிதாக சாலை அமைத்து தரும்படி கோரிக்கை...
மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விருதுநகர், டிச.13: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் தொடர் சாரல் மழை...
பி.சி, எம்பிசி, சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், டிச.12: பிசி, எம்பிசி, சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது....
டூவீலர் மீது கார் மோதி ஆசிரியர் பலி
ராஜபாளையம் டிச. 12. ராஜபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்தார் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வின்சென்ட்(80). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோதை நாச்சியார் புரம் விலக்கு பகுதியில் வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையில் இருந்து ஒரு...
அருப்புக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு
அருப்புக்கோட்டை, டிச. 12: அருப்புக்கோட்டை அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன்...
அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அருப்புக்கோட்டை, டிச. 11: அருப்புக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம்...
வத்திராயிருப்பு பகுதியில் எலுமிச்சை கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு, டிச. 11: வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அர்ச்சனாபுரம், புதுப்பட்டி, மீனாட்சிபுரம். கான்சாபுரம், சேஷாபுரம், தாணிப்பாறை, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையக்கூடிய எலுமிச்சைகளை விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது எலுமிச்சை சீசன்...
சிசிடிவி கேமரா அவசியம்
விருதுநகர், டிச. 11: விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடும் பொது இடங்கள், நெருக்கடியான கடை வீதிகள், கரும்புள்ளி பட்டியலில் உள்ள கிராமங்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அச்சமடைவர். வழிப்பறி, வீடுகளில் கொள்ளை, டூவீலர் திருட்டு, பெட்டி கடை உடைப்பு,...
சிவகாசியில் பஸ் மோதி முதியவர் படுகாயம்
சிவகாசி, டிச. 10: வெம்பக்கோட்டை அருகே மேலாண் மறைநாடு செல்லம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (80). இவர் நேற்று முன்தினம் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டிக்குள் வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில்...