பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு அனுமதி மறுப்பு
புவனகிரி, நவ. 29: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் மழையால் மூடப்பட்டது. இதையடுத்து படகு சவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். உலக பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை எனப்படும்...
கடலுக்கு 2 நாட்டு படகுகளில் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்தது
கடலூர், நவ. 28: எச்சரிக்கையை மீறி 2 நாட்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கவிழ்ந்தது. இதில் 6 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் வருகிற 30ம் தேதி கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கரையை...
ஓங்கூர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்
மரக்காணம், நவ. 28: மரக்காணம் ஒன்றியத்தில் காணிமேடு, மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, கந்தன்பாளையம், ஆலத்தூர், அசப்போர், ராயநல்லூர், நாவல்பாக்கம், பந்தாடு நகர், வட நற்குணம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர்...
விழுப்புரம் அருகே பயங்கரம் பிறந்தநாள் பார்ட்டியில் நாட்டு வெடி வீசி நண்பர்களை கொல்ல முயன்ற வாலிபர் கைது
விழுப்புரம், நவ. 28: விழுப்புரம் அருகே மதுவிருந்து பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடி வீசப்பட்டதில் இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து இருதரப்பு மோதிக் கொண்டதில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (42), இந்துமுன்னணி மாவட்ட செயலாளர்....
வாலிபர் மீது தாக்குதல்
கடலூர், நவ. 27: கடலூர் அருகே தோட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுதிர்(25). சம்பவத்தன்று இவர் கோண்டூர் பஸ் ஸ்டாப் அருகில் பைக்கில் வந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேர் அவரை வழிமறித்து, நீ யாருடா, ஊருக்கு புதுசா இருக்கிறாய் எனக் கேட்டதாகவும், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று சுதிர்...
குறைந்த வட்டியில் கடன், பகுதிநேர வேலை எனக்கூறி புதுச்சேரி பெண் உள்பட 10 பேரிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரி, நவ. 27: புதுச்சேரியில் குறைந்த வட்டியில் கடன், பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெண் உள்பட 10 பேரிடம் ரூ.2.12 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். புதுச்சேரி அரியூரை சேர்ந்த ஆண் நபரை தனியார் நிதி நிறுவன அதிகாரி என அறிமுகம் செய்து, ரூ.10 லட்சம் குறைந்த வட்டியில்...
எஸ்ஐஆர் பணி சுமையால் மயங்கி விழுந்த வருவாய் ஆய்வாளர் திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம், நவ. 27: எஸ்ஐஆர் பணியில் இருந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வருவாய் ஆய்வாளராக ஆனந்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் எஸ்ஐஆர் பணியில் சூப்பர் வைசராக பணியை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திண்டிவனம் சார் ஆட்சியர்...
குடும்ப டாக்டர் போல் மெசேஜ் அனுப்பி பணம் பறிப்பு லாட்டரி சீட்டு விழுந்து இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
புதுச்சேரி, நவ. 26: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு அவரது குடும்ப டாக்டர் அனுப்புவது போல் வாட்ஸ்அப்பில் மர்ம நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் அவசர தேவைக்காக ரூ.65 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய ஆண் நபர், மேற்கண்ட பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகே...
கப்பியாம்புலியூரில் பரபரப்பு பாலம் அமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி, நவ. 26: கப்பியாம்புலியூரில் சாலை விபத்துகளை தவிர்க்க பள்ளி எதிரே மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தஞ்சாவூர்-கும்பகோணம் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும்போது அதிக அளவில் சாலை விபத்தில்...