தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேத்தியாத்தோப்பு - சோழபுரம் வரை நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தது

சேத்தியாத்தோப்பு, ஜூலை 28: பின்னலூர்-சோழபுரம் வரை நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில் ஒரு சில இடங்களில் சேவை சாலைகள், சிறு பால கட்டுமான பணிகள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், மற்ற பகுதிகளில் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விரிவாக்க பணிகளை முடித்துள்ளது. மேலும் இந்த விரிவாக்க பணிகள் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் தொடங்கி அரியலூர் மாவட்டம் சோழபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் வரை ரூ.2,357 கோடியில் கட்டமைக்கப்பட்டு, சாலை பணிகள் முடிவடைந்துள்ளது.

Advertisement

இதையடுத்து இச்சாலையை பிரதமர் மோடி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தூத்துக்குடியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் பின்னலூர்-சோழபுரம் வரை இந்த நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனை வரவேற்கும் விதமாக பின்னலூரில் உள்ள விக்கிவாண்டி-கும்பகோணம் சாலை முகப்பு கைகாட்டியில் தோரணங்கள்

அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Related News