தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரம் சேகரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில்
வேலூர், டிச.10: அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரங்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் தனித்திறமை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டி நடத்தி...
பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் மழையால் தீவனம் தட்டுப்பாடு இல்லை
வேலூர், டிச.10: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சத்துக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது. இந்த வாரம் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்
வேலூர், டிச.9: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில், நேற்று கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்...
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்
வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு: காட்பாடி முன்னாள் மண்டல துணை தாசில்தார் துளசிராமன் நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, அதே அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் ஆர்டிஓ அலுவலக முன்னாள் துணை தாசில்தார் வாசுகி, நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, கலெக்டர் அலுவலக...
கடைக்காரர் 16 சவரன் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் குடியாத்தத்தில் பழைய நகையை உருக்கி
வேலூர், டிச.9: குடியாத்தம் பகுதியில் பழைய நகையை உருக்கி, புதிய நகை செய்து தராமல் 16 சவரன் மோசடி செய்யப்பட்டதாக கடைக்காரர் மீது பெண் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமாரி, நர்சிங் படித்துள்ளார். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியாத்தம் பகுதியில்...
நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சி.கடும் பனிப்பொழிவால் ஏற்படும் முகவாதத்தை தடுப்பது எப்படி? டாக்டர்கள் விளக்கம்
வேலூர், டிச.8: கார்த்திகை, மார்கழி மாதங்களில், பனிப்பொழிவால் பெண்களுக்கு முகவாதம் ஏற்படுவதை தடுப்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் முகவாதம் என்பது...
பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண் அதிகாரிகள் தகவல்
வேலூர், டிச.8: நெல் பயிரைத் தாக்கும் புகையான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கினால் விளைச்சல் பாதிக்கும். பயிரின் அடிப்பாகத்தில் பூச்சிகள் மற்றும் குஞ்சுகள் காணப்படும். பயிர்கள் மஞ்சளாக மாறி, பிறகு பழுப்பு நிறமாகி,...
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: யார் அவர்? போலீசார் விசாரணை
வேலூர், டிச.8:அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அரக்கோணம் அருகே அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று தலை சிதறிய நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ஹரிசங்கர் கொடுத்த...
வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையத்தில்
ஒடுகத்தூர், டிச.7: ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(38), இவர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். அதேபோல் அதே கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(46), இவர் கேபிள் டிவி மற்றும் சுப விஷேசங்தளுக்கு பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சியில் துணை...