தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் ஆம்பூர் வாலிபர் போக்சோவில் கைது

 

Advertisement

பள்ளிகொண்டா, டிச.9: பள்ளிகொண்டாவில் 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் ஷூ கம்பெனியில் கடந்த ஜூன் மாதம் முதல் வேலை செய்து வருகிறார். அப்போது, ஆம்பூர் சுகர்மில் பகுதியை சேர்ந்த வினோத்(22) என்பவர் சிறுமிக்கு பழக்கமாகி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி வழக்கம்போல் ஷூ கம்பெனிக்கு செல்வதற்காக பள்ளிகொண்டா பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிறுமியிடம், வாலிபர் வினோத் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், மைசூரில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டு, வினோத் ஒருமாதம் அங்கேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வினோத் அந்த சிறுமியுடன் அவரது சொந்த ஊரான சுகர்மில் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியுடன் இருந்த வினோத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News