தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாம்பு கடித்து விவசாயி உள்பட 2 பேர் சாவு

திசையன்விளை, ஜூலை 31: திசையன்விளை அருகே உள்ள வாகைநேரி கிராமத்தை சேர்ந்தவர் திரவியம் (33). இவர் சுவிசேஷபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை தொட்டிக்காரன்விளை பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கேட்வால்வை திருப்பச்சென்றுள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தேடிய போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக திரவியத்தை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், திரவியம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். திரவியம் பாம்பு கடித்து இறந்தது குறித்து திசையன்விளை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல், களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் முத்துக்குமார் (40). பெயிண்டரான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி தனது வீட்டின் முன்பு முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த விஷப்பாம்பு அவரை கடித்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News