தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேரன்மகாதேவியில் பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி வழங்கும் இன்ஸ்பெக்டர்

வீரவநல்லூர், ஜூலை 31: சேரன்மகாதேவியில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கைப்பந்து பயிற்சி வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

சேரன்மகாதேவியின் போலீஸ் இன்ஸ்பெக்டராக தர்மராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். நெல்லை மாவட்டத்தில் இளம் சிறார்கள் அதிகஅளவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பகுதியாக சேரன்மகாதேவி இருப்பதை கண்ட அவர் மாணவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டினை ஊக்குவிக்க முயன்றார். இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பள்ளி கோடை விடுமுறை தொடங்கும் முன்னர் அதிக இளம்சிறார் உள்ள பகுதியாக திகழும் சேரன்மகாதேவி தேரடி தெரு பகுதியில் மாணவர்களுக்காக இறகு பந்து மைதானம் அமைத்து கொடுத்தார்.

தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பேட் மற்றும் இறகு பந்துகள் வாங்கி கொடுத்து மாணவர்களிடையே விளையாட்டு பழக்கத்தை ஏற்படுத்தினார். மாணவர்களின் பாதுகாப்பாக மைதானத்தை சுற்றிலும் பென்சிங் வேலி அமைத்து கொடுத்தன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாக அந்த மைதானத்தில் விளையாடி வந்தனர். தற்போது அந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கைப்பந்து பயிற்சி இன்ஸ்பெக்டர் வழங்கி வருகிறார். பள்ளி, கல்லூரியில் கைப்பந்து வீரராக திகழ்ந்த இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கிடைக்கின்ற நேரங்களில் மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி வழங்கி வருகிறார். மாணவர்களை நல்வழிப்படுத்த தொடர் முயற்சி மேற்கொண்டும் வரும் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

Related News