தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம் வட்டார பகுதிகளில் தனிப்படை 24மணி நேர கண்காணிப்பு

ஆலங்குளம், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், காளத்திமடம், குருவன்கோட்டை, நல்லூர், மருதம்புத்தூர், புதுப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 32 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காரையார் சொரிமுத்து அய்யனார், திருச்செந்தூர் முருகன் கோயில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்களுக்கு குடும்பத்துடன் தரிசிக்க புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வெளியூர் செல்பவர்கள் ஊருக்கு திரும்பிவர இரு தினங்களுக்கு மேலாகும் என்பதால் ஊரே வெறிச்சோடிகாணப்படுவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஆங்காங்கே சில திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர்.

ஆனால், நடப்பாண்டில் இதுபோன்று எந்தவிதமான குற்றச்சம்பவங்களும் ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் நடைபெறாமல் தடுக்கும்பொருட்டு ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தனது தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள், போலீசார், ஊர்க் காவல் படையினர் என சுமார் 200 பேர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையை அமைத்தார். இதையடுத்து ஒரு கிராமத்திற்கு 4 பேராக பிரிக்கப்பட்ட தனிப்படையினர் பகலில் இருவர், இரவில் இருவர் என இரு பிரிவுகளாக பிரிந்து ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 மணி நேர தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.