தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம்

 

கேடிசி நகர், ஜூலை 28: தமிழ்நாட்டில் நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் குலவணிகர்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நெல்லை எம்.பி., ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விதி எண்-377ன் கீழ் பேசியதாவது: நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே இருப்புப் பாதையில் குலவணிகர்புரம் லெவல் கிராஸிங் எண் 4ல் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான முன்மொழிவு உள்ளது.

குலவணிகர்புரத்தில் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 16 முறை முழுவதுமாக மூடப்படுகிறது. பயண நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் பாதை மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அரசு அதிகாரிகளும் தங்கள் பயணத்தின் போது தினமும் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசு தோராயமாக ரூ.100 கோடிக்கான மதிப்பீட்டை தயார் செய்து மே 2015 முதல் வாரத்தில் தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.

நானும் கடந்த ஏப்.16ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தெற்கு ரயில்வே சென்னை பொது மேலாளரை நேரில் சந்தித்து, இந்த விஷயத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினேன். ஆனால் 2 மாதங்கள் கடந்து விட்டன. ரயில்வேயிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த திட்டத்தை முடிக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் தொகை செலுத்த வேண்டும். எனவே திட்டத்தைத் தொடங்க தடையின்மைச் சான்றுடன் 50 சதவீதம் நிதியை ஒதுக்குமாறு ஒன்றிய ரயில்வே நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார்.

Related News