தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தலைவன் கோட்டையில் தெருகுழாய் அமைக்கும் பணிக்கு ஐகோர்ட் பாராட்டு

மதுரை, ஜூலை 24: ரூ.5 லட்சத்தில் தெருகுழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பா ராட்டு தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையில் சிலரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து திருமலைச்சாமி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். புகார்தாரர் முனியம்மாள் தரப்பில், மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினமாக உள்ளதாக நீதிபதியிடம் கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘தண்ணீர் பொதுவான வளம். அதை பகிர்ந்து கொள்வதில்கூட, இன்னும் பிற சமூகத்தினரால் சிலர் ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்றனர். இது அறிவியல் யுகத்தில் வியப்பாக உள்ளது. தலைவன்கோட்டை தெருக்களில் போதிய குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் ஒளிராஜா ஆஜராகி, கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் ெசய்தார். அதில், ரூ.5 லட்சம் செலவில் குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக அரசு மற்றும் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Related News