தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குற்றாலத்தில் தொடரும் மழை மெயினருவியில் 7வது நாளாக குளிக்க தடை

 

தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் தொடரும் மழை காரணமாக 7வது நாளாக மெயின் அருவியில் தடை நீடிக்கிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் நான்காவது நாளாக நேற்றும் தடை நீடித்தது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர்வரத்து அதிகரிப்பு காரணமாக போலீசார் சுற்றுலா பயணிகளை பிரதான அருவிகளில் குளிக்க அனுமதிக்கவில்லை. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத்தாண்டி தடாகத்தில் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் அதிகமாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. வெயில் அவ்வளவாக இல்லை.

வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின்அருவியில் ஏழாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் நான்காவது நாளாக சுற்றுலா பகுதிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர் தடை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சுமாராக உள்ளது.