தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடியில் 2 பேரை கைது செய்த மேற்கு வங்க போலீஸ் தலைமறைவான பாஜ பிரமுகர் 2 பேருக்கு வலை: வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, ஜூலை 24: ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடி விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பாஜ பிரமுகர் 2 பேரை மேற்கு வங்க போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பாஜக பிரமுகரும், தேசூர் அடுத்த மொலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பாஜக பிரமுகரும் நண்பர்கள். இருவரும் ஆன்லைன் மூலமாக ரூ.1000 ஆயிரம் பணம் செலுத்தினால், ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆன்லைனில் தகவல் பரப்பினர்.

இதை நம்பிய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரூ.1.50 கோடி வரை பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆன்லைனில் பணத்தை ஏமாந்த நபர்கள் மேற்கு வங்க மாநில போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மேற்குவங்க மாநிலம் கல்கத்தா மிதான் நகர் சைபர் கிரைம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் மஜூந்தர் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் படையினர் கடந்த ஒரு வாரமாக வந்தவாசி நகரில் தங்கி, அவர்களை கண்காணித்தனர்.

இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கில் பணம் அனுப்பிய முகவரியை போலீசார் கண்டுபிடித்து அதில் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன்(35), அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மன் மகன் வெங்கடேசன்(40) என தெரியவந்தது.

இதுகுறித்து வந்தவாசி போலீசாரிடம் மேற்கு வங்க போலீசார் கூறியதாவது:

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகன் வெங்கடேசன் வங்கி கணக்கில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து தலா ரூ.15 லட்சம் வந்துள்ளது. இந்த பணத்தை பாஜ பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பணம் என்றும், இந்த பணம் உனது வங்கி கணக்கிற்கு வரும், அதை எடுத்து கொடுத்தால் ரூ.1 லட்சம் கமிஷன் பணம் வரும் எனவும் கூறி அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்தியது தெரியவந்தது என்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சாமியார் பெயரைக் கொண்டவர் இந்த பாஜ பிரமுகர். இவருடன் தேசூர் அருகே மொலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பாஜ பிரமுகரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளி என தெரியவந்ததால் இவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தேவன், வெங்கடேசன் இருவரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்குவங்க மாநிலத்திற்கு நேற்று கொண்டு சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைன் மூலமாக பாஜக பிரமுகர்கள் பண மோசடி செய்துள்ள சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related News