கணவன், மனைவி மீது கட்டையால் தாக்குதல் 5 பேருக்கு போலீஸ் வலை ஆரணியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில்
ஆரணி, ஜூலை 31: ஆரணியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் கணவன், மனைவி மீது கட்டையால் சரமாரி தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி டவுன் காந்தி நகரை சேர்ந்தவர் குலாப்நபி(40), இவரது மனைவி மைதிலி(38), இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவருக்கும், இடையே நகராட்சி குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் இவருவரையும் சமாதம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். பின்னர், மணிகண்டன் மதுபோதையில் மீண்டும் குலாப்நபி அவரது மனைவியிடம் சென்று தகராறு செய்து அசிங்கமாக பேசி திட்டினாராம்.
அப்போது, குலாப்நபி, மணிகண்டனை தட்டி கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரது உறவினர்கள் ஜெரினா, பவித்ரா, புவனேஷ்வரி, தேவி ஆகிய 5 பேரும் சேர்ந்து குலாப்நபி, அவரது மனைவி மைதிலியை கீழே தள்ளி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிசென்றார்களாம். இதில், படுகாயமடைந்து ரத்த காயத்துடன் இருந்த குலாப்நபி, அவரது மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் குலாப்நபியின் மனைவி மைதிலி(38), நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்டன் உட்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.