தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

15 கிலோ வெள்ளி கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரம் 500 சிசிடிவி கேமராக்களை தனிப்படை ஆய்வு ஆரணியில் நடந்த சம்பவம்

ஆரணி, ஜூலை 30: ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் இ.பி.நகரை சேர்ந்த பெருமாள்(37), என்பவர், ஆரணி-வேலூர் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி கடைக்கு வந்தபோது, கடையின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள், 15 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மேலும் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 25 கிலோ நகைகள் தப்பியது. கொள்ளை கும்பல் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அகிலன், சுந்தரேசன், விநாயகமூர்த்தி, மகலட்சுமி தலைமையிலான போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆரணி டவுன், சேவூர் பைபாஸ் சாலை, வேலூர், விழுப்புரம், வந்தசாவி, செய்யாறு, திருவண்ணாலை செல்லும் சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் முதற்கட்டமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் என்பதும், அவர்கள் கடையில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து, பையில் எடுத்துக்கொண்டு, ஹெல்மெட் அணிந்தபடி, ஆரணி டவுன் பகுதியில் முக்கிய வீதிகளில் சுற்றியவிட்டு, தப்பி சென்றுள்ளனர். கொள்ளை கும்பல் ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து தடயம் சிக்கியுள்ளதால், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.