தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செய்யாறு அருகே கல்குவாரி மேலாளர் மீது தாக்குதல்: கிராம மக்கள் மீது வழக்கு

செய்யாறு, ஆக. 3: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சந்தோஷ்குமார்(29) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் சென்று, திருவிழா நடத்துவதற்காக சில லட்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமத்திற்கு பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு கல்குவாரி நிறுவனத்தினர், ‘இங்கு எத்தனையோ குவாரிகள் உள்ளது. எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள், எல்லோரிடமும் கேளுங்கள்’ எனக்கூறி அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 20 பேர் கொண்ட கிராம மக்கள், தனியார் கம்பெனி எதிரே மண்ணை கொட்டி மண்மேட்டை எழுப்பி மேலாளர் சந்தோஷ்குமாரை தரக்குறைவாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து சந்தோஷ்குமார், தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார், கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News