தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில்

 

தண்டராம்பட்டு, ஜூன் 27: தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் எடத்தனூர் பகுதியில் நேற்று காலை 9.40 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 2 ஹெலிகாப்டர்கள் பறந்தது. எடத்தனூர் கிராமத்தில் 100 அடி உயரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து மேலே சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: எடத்தனூர் திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறு உள்ளதாக சேட்லைட் மூலம் கண்டறிந்துள்ளனர். இவற்றை டெல்லியில் இருந்து ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் காரில் வந்து ஆய்வு செய்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து அதிகாரிகள் பார்த்தனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றனர்.

Related News